districts

img

வனத்துறை தடையால் மலைக் கிராமங்களில் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு

கடமலைக்குண்டு, ஆக.4- தேனி மாவட்டம், மயிலாடும்பாறையில் உள்ள கடமலை-மயிலை ஒன்றிய  அலுவலகத்தில் வெள்ளிக் கிழமையன்று ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு கடமலை-மயிலை ஒன்றி யக்குழு தலைவர் சித்ரா சுரேஷ் தலைமை தாங்கி னார். ஒன்றிய ஆணையர்கள் பாலகிருஷ்ணன், இளங்கோ வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 9 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டம் தொடங்கியவு டன் கவுன்சிலர்களின் ஒப்பு தலுக்காக வரவு, செலவு கணக்குகள் வாசிக்கப் பட்டது. பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் கிராம பகு திகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப் பட்டது. ஆலோசனையின் போது கடமலை-மயிலை ஒன்றிய மலைக்கிராமங்க ளில் சிமெண்டு ரோடு, சாக்கடை வடிகால், தார்ச் சாலை உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் செய்வதற்கு வனத்துறையினர் தொடர்ந்து தடை விதித்து வருகின்றனர். இதனால் மலைக்கிராமங்களில் எந்த வித வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ள முடிய வில்லை. வனத்துறை மாவட்ட அதிகாரிகளிடம் பேசி பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என அனைத்து கவுன்சிலர்களும் கோரிக்கை விடுத்தனர். வனத்துறையினர் பிரச் சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர், ஆண்டி பட்டி எம்.எல்.ஏ ஆகியோரி டம் கோரிக்கை விடுத்துள் ளோம். விரைவில் சுமூக முடிவு ஏற்படும் என ஒன்றி யக் குழு தலைவர் தெரி வித்தார். தொடர்ந்து வளர்ச்சிப் பணிகள் குறித்த கவுன்சிலர்களின் கேள்வி களுக்கு ஒன்றியக்குழு தலை வர் மற்றும் ஆணையர்கள் பதிலளித்தனர்.