districts

img

ஏர்வாடி தர்ஹா திருவிழா தொடங்கியது

இராமநாதபுரம், மே 22- இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி யில் பிரசித்தி பெற்ற மஹான் சுல்தான்  செய்யது இபுராகிம் ஷஹீத் ஒலி யுல்லாஹ் தர்ஹா உள்ளது. இந்த தர்கா வில் 849-ம் ஆண்டு சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக தர்ஹா ஹக்தார்கள் முன்  னிலையில் இராமநாதபுரம் மாவட்டம் டவுன் காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலை மையில் மவுலீது ஷரிப் (புகழ் மாலை) மற்றும் சிறப்பு பிரார்த்தனையுடன் தொடங்கியது. மே 31-ஆம் தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ணக் கொடி யானை மேல் வைத்து ஊர்வல மாக கொண்டு வரப்பட்டு கொடியேற்  றம் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா ஜூன் 12-ஆம் தேதி மாலை தொடங்கி ஜூன் 13-ஆம் தேதி அதி காலை தர்ஹா மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.  ஜூன் 19-ஆம் தேதி நிறைவு நிகழ்ச்சியான அஸர் தொழுகைக்குப் பின் கொடி யிறக்கம் நடைபெறும்.