districts

img

மரண வியாபாரிகளாக மாறிவிட்ட ஜோ பைடன்-நரேந்திர மோடி

திண்டுக்கல், அக்.21 இஸ்ரேல், காசா மீது நடத்திய  கொடூர தாக்குதலை ஆதரிப்பதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ  பைடனும், இந்திய பிரதமர் மோடி யும் மரண வியாபாரிகளாக மாறி விட்டனர் என்று கே.பாலபாரதி பேசி யுள்ளார்.  இஸ்ரேல் காசாவின் மீது நடத் திய தாக்குதலைக் கண்டித்து திண்  டுக்கல் மணிக்கூண்டு அருகே இந்தியா கூட்டணி சார்பில் சனிக்கிழ மையன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாந கரச் செயலாளரும் துணை மேயரு மான ராஜப்பா தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர். சச்சிதானந்தம் முன்னிலை வகித்  தார். மாநிலச் செயற்குழு உறுப்பி னர்கள் கே.பாலபாரதி, என்.பாண்டி, நகரச் செயலாளர் எ.அரபு முகமது, ஒன்றியச் செயலாளர் சரத்குமார், திமுக ஒன்றியச் செய லாளர் நெடுஞ்செழியன், காங்கி ரஸ் மாநகரத் தலைவர் துரை.மணி கண்டன், சிபிஐ பி.கிருஷ்ணசாமி, விசிக மைதீன்பாவா, அன்பரசு, மதி முக செல்வேந்திரன், முஸ்லீம் லீக்  அம்ஜாஅகமது, மமக ஷேக்பரீத், திக வீரபாண்டி,  கருணாநிதி, ஜமா  அத்துல் உலமா, நகரச் செயலாளர்  ஹஜ்ரத் பீர்முகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநி லச் செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி பேசுகையில், ‘‘காசா வில் உள்ள மருத்துவமனையில் ஏவுகணை தாக்கி குழந்தைகளை கொன்று மனித குல விரோதி களாக இஸ்ரேல் உள்ளது.  குழந்தைகளை இஸ்லாமியர் களாக, யூதர்களாக, கிறிஸ்து வர்களாக பார்க்க முடியாது. உல கில் குழந்தைகள் எல்லோரும் குழந்தைகள் தான். அந்த குழந்  தைகளை ஈவிரக்கமின்றி கொன்ற  இஸ்ரேலிய அரசை ஆதரிப்ப வர்கள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்திய பிரதமர் மோடி யும் தான். இவர்கள் மரண வியாபாரி களாக மாறிவிட்டார்கள்.  ஆதிக்க நாடுகளால் எங்கே உங்கள் நிலம் பறிக்கப்படுகிறதோ அங்கேயெல்லாம் குரல் கொடுக்க இந்தியா கூட்டணி உள்ளது. பாலஸ்தீனத்தை துண்டாடிய தந்திரத்தை பிரிட்டன்-அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகள் செய்தன.  அரபு நாட்டில் உள்ள எண்  

ணெய் வளத்தைக் கொள்ளை யடிக்க நடந்த ஏற்பாடாக நாம் பார்க்கிறோம். காசாவில் குடிக்க தண்ணீர் இல்லை. மக்கள் வாடிக் கொண்டிருக்கிற சூழலில் போர் நடைபெறுகிறது’’ என்றார்.  ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி பேசுகையில், ‘‘ஒன்றிய பாஜக அரசு இஸ்ரேலுக்கு ஆதர வாக இருப்பதை இந்த தேசமே எதிர்க்கிறது. இந்த நாடு சுதந்திரம்  அடைந்ததற்கு பிறகு எந்த பிர தமரும் இஸ்ரேலுக்கு சென்ற தில்லை. இஸ்ரேலை அங்கீகரித்த தும் இல்லை.  ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த  பிறகு வாஜ்பாய் பிரதமராக இருந்த  போது இஸ்ரேலுக்கு சென்றார். ரஷ்யா-உக்ரைன் போரில் இந் தியா நடுநிலை வகித்தது. ரஷ்யாவில் இருந்து நமக்கு தேவையான சமை யல் கேஸ், பெட்ரோல் மற்றும் கச்சா  எண்ணெய் கிடைக்கிறது.  அந்த கச்சா எண்ணெய் அதானி கம்பெனிக்கு கொள்ளை லாபம்  அடைய பயன்படுகிறது. அது தடை பட்டு விடக்கூடாது என்பதற்காக நடுநிலை வகித்தது. 23 லட்சம் மக்  கள் தொகை கொண்ட காசா பகுதி யில் இஸ்ரேல் அடாவடியான போரை நடத்தி வருகிறது. பாலஸ்தீ னம் சுதந்திர நாடாக இதுவரை நடத்தப்பட்டது இல்லை.  இஸ்ரேலுடன் பாலஸ்தீனம் நடத்திய பேச்சுவார்த்தை முடிவு களை அமலாக்கவில்லை. காசா  இப்போதும் இஸ்ரேல் ஆக்கிரமிப் பில் உள்ள பகுதியாக உள்ளது.  ஆனால் இந்திய பிரதமர் இஸ்ரே லுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்’’ என்று கூறினார்.