சென்னை, டிச.12- தென்னிந்திய மகப்பேறு மருத்து வர்கள் சங்கத்தின் (ஆக்ஸி) தலைவ ராக மருத்துவர் ஜெயராணி காம ராஜ் தேர்வு செய்யப்பட்டார். தென்னிந்திய மருத்துவர்கள் சங்க 39வது சர்வதேச மருத்துவ மாநாடு சென்னையில் நடை பெற்றது. இதில் உலகின் பல பகுதி களிலிருந்து நேரிலும், ஆன்லைன் மூலமாகவும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மகப்பேறு மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள நவீன மேம்பாடுகள், சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர். இம்மாநாட்டின்போது 2023 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் மரு. ெஜயராணி காமராஜ் தலைவராகவும், மரு. குந்தவி செயலாளராகவும் தேர்வு பெற்றனர். புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் நிர்வாகிகள் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தனர். பிறகு பேசிய ஜெயராணி,“ தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்கத்தை (ஆக்ஸி) இன்னும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு குழுக்கள் அமைத்து செயல் படுத்தப்படும்”என்றார். மருத்துவ வல்லுநர்களுக்கும், அவர்களது மருத்துவமனைகளுக்கும் ஏற்படும் பிரச்சனை களை சட்டரீதியாக எதிர்கொள்ள சட்ட மையம் (லீகல் செல்) அமைக்கப்படும். மரு. விவேக், மரு. எஸ்.விஜி, கேரளா விலிருந்து சில சட்ட வல்லுநர்கள் ஆகியோர் இதில் இடம் பெறுவர் என்றும் அவர் கூறினார்.