மதுரை, பிப்.12- சிபிஎஸ் திட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும். ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மாவட்ட அளவிலான மாநாடு ஞாயி றன்று மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் க.நீதிராஜா, வி. பாபு பிரேம்குமார், நவநீத கிருஷ்ணன், மு.பொற்செல் வன், அ. ஜோயல்ராஜ், ச. கண்ணன் ஆகியோர் தலை மையில் நடைபெற்ற மாநா ட்டில் மாநில ஒருங்கிணைப் பாளர்கள் எம்.பி. முருகை யன், ஆ.செல்வம் ஆகியோர் பேசினர். உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் . ஆசிரியர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அரசுப்பணியாளர் சங்க மாநில, மாவட்ட நிர் வாகிகள் கலந்துகொண்டனர். மாநாட்டின் நோக்கம் குறித்து எம்.பி.முருகையன், ஆ.செல்வம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- முடக்கப்பட்ட அக விலைப்படி நிலுவைத் தொகை, சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதி யம் உள்ளிட்டவற்றை உட னடியாக வழங்க வேண்டும். தொகுப்பூதியம்- சிறப்பு கால முறை ஊதியத்தில் பணிபுரி யும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், எம்ஆர்பி செவிலியர், வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர் ஆகியோ ருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரி யும் பணியாளர்கள், ஆசிரி யர்கள், பகுதிநேர ஆசிரி யர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சாலைப் பணி யாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை நிறைவேற்ற வேண்டும். கோரிக்கை களை வலியுறுத்தி மார்ச் 5-ஆம் தேதி மாநிலம் முழு வதும் மாவட்டத் தலைமைய கத்தில் ஒரு நாள் உண்ணா விரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்ற னர்.