சூரியனை ஆய்வு செய்யும் வகையில், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஆதித்யா எல் 1 விண்கலத்தை சனிக்கிழமையன்று இஸ்ரோ ஏவியது. மதுரை, இடையபட்டி கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் காணொலி திரையின் மூலம் விண்கல பயணத்தை நேரலையாக கண்டு மகிழ்ந்தனர். நிகழ்வில், பள்ளி முதல்வர் பானுமதி, ஆசிரியர்கள் மோகன், வீனஸ் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.