districts

img

சிவகங்கை மாவட்டத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் நீர்ப்பாசன மேலாண்மை

சிவகங்கை மாவட்டத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் நீர்ப்பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் (TNIAMP) திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கென ரூ.2962 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளின் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு நீர்பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்ட இயக்குநர் தென்காசி எஸ்.ஜவகர்,, சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, நீர்வள மேலாண்மை நிபுணர் முனைவர் கிருஷ்ணன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.