திருவில்லிபுத்தூர், செப்.28- திருவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் முறைகேடு நடப்பதாகக் கூறி வார்டு உறுப்பினர்கள் புதன்கிழமையன்று வெளிநடப்பு செய்து, பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவில்லிபுத்தூர் ஒன்றியம் பிள்ளையார்குளம் ஊராட்சியில் துலுக்கன்குளம், நூர்சாகிபுரம், வன்னி யம்பட்டி, பெருமாள்தேவன்பட்டி, வேப்பங்குளம், பிள்ளையார்குளம், மோட்டமலை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இதில் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் நடைபெற்ற ஊராட்சிமன்றக் கூட்டத் தில் ஊராட்சி துணைத் தலைவர் உட்பட 5 வார்டு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதில் ஜெய லட்சுமி, பெருமாள் கார்த்திக், இந்திரா, பொன்னுச் சாமி ஆகிய நான்கு பேரும் ஊராட்சியில் முறைகேடு நடப்பதாகவும், வார்டு உறுப்பினர்களின் கருத்துக் களை கேட்காமல் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுவ தாகவும் புகார் தெரிவித்தனர். ஊராட்சி வரவு, செலவு கணக்குகளை முறையாக உறுப்பினர்களிடம் தெரிவிப்ப தில்லை என கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த னர். பின்னர் நான்கு உறுப்பினர்களும் ஊராட்சி அலுவல கம் முன் கண்டன பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து வார்டு உறுப்பினர்கள் கூறுகை யில்,‘ஊராட்சியில் நடைபெறும் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களுடன் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடமும், தபால் மூலம் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி யும் நடவடிக்கை இல்லை. முறைகேடு குறித்து கேள்வி எழுப்பும் உறுப்பினர்களை, ஊராட்சி செயலர் மிரட்டு கிறார். முறைகேடு குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்ய உள்ளோம் என்று தெரிவித்தனர்.