யுனிசெப், சைல்டு லைன் இந்தியா அறக்கட்டளை, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் சிவகங்கை சைல்டுலைன் இணைந்து குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடின. சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் குழந்தை திருமணம் மற்றும் பாலியல் தாக்குதலிருந்து பாதுகாத்து கொள்வது, குழந்தைகள் விளையாட்டுகளில் பங்கேற்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவமணி, சைல்டு லைன் இயக்குநர் ஜீவானந்தம், குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தேவி, ரசீந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.