புதுதில்லி, செப்.12- ஹரியானாவின் நூ கலவரத்துக்கு காரணமான மோனு மானேஸர் கைது செய்யப்பட்டுள் ளார். ராஜஸ்தானி யர் இருவரை எரித்துக் கொல்லப் பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானாவின் நூவில் இந்துத்துவா அமைப்புகள் கடந்த ஜூலை 31-இல் ஆன்மிக ஊர்வலம் நடத்தினர். இதை இதர சமுதாயத்தினர் தடுத்து நிறுத்தியதால் கல வரம் ஏற்பட்டது. இதற்கு, பசு பாதுகாவல ரான மோனு மானேஸர், சமூக வலைதளங் களில் இட்ட பதிவு காரணம் எனப் புகார் எழுந்தது. இக்கலவரம், அருகிலுள்ள குரு கிராமிற்கும் பரவி அங்குள்ள மசூதிக்கு தீ வைக்கப்பட்டது. குருகிராம் மசூதியின் இளம் மவுலானா, 2 ஊர்காவல் படையினர், ஒரு முன்னாள் பஜ்ரங்தளம் நிர்வாகி உள் ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக் கான வாகனங்களும் தீக்கிரையாக்கப் பட்டன. இக்கலவரம், நூவை சுற்றியுள்ள பல்வல், குருகிராம், பரீதாபாத் மற்றும் ஆகிய நகரங்களிலும் பரவியது. இதனால், வெளிமாநிலங்களிலிருந்து பிழைக்க வந்த பல நூறு முஸ்லிம் குடும்பங்கள் தங்கள் ஊருக்கு திரும்பி விட்டனர். இப்பகுதியில் அமைதி திரும்ப, மத்திய பாதுகாப்பு படை யினர் மற்றும் ஹரியானா போலீஸாரின் பலத்த பாதுகாப்பும் போட வேண்டியதா யிற்று.
இதில் இருதரப்பிலும் பலர் கைதா னாலும், முக்கியக் குற்றவாளியான மோனு மானேஸர் தலைமறைவாகவே இருந்தார். எனினும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவுகளை இட்டு தம்மீது எந்த தவறும் இல்லை எனவும் விளக்கம் அளித்து வந்தார். இச்சூழலில், இன்று காலை மோனு மானேஸர், குருகிராமின் செக்டர் 1-இல் ஹரியானா போலீஸாரால் சுற்றி வளைக்கப் பட்டார். இவர் மீது ராஜஸ்தான் காவல் துறையிலும் இரட்டை கொலை வழக்கு பதிவாகி உள்ளது. கடந்த பிப்ரவரி 16-இல் ராஜஸ்தான் பரத்பூரை சேர்ந்த நசீர் (27), ஜுனைத்(35) என்ற இருவர் ஹரியானாவின் பிவாணியில் எரித்துக் கொல்லப்பட்டனர். இவர்கள் பசுக்களை கடத்தியதாகக் கூறி, பசு பாதுகாப்பு படையினரால் இருவரும் கொல்லப்பட்டதாக வழக்குப் பதிவாகி நடைபெறுகிறது. இந்த வழக்கில் பசுப் பாதுகாப்பு குழு வின் தலைவரான மோனு மானேஸர், அவ ரது சகாக்களான அணில், ஸ்ரீகாந்த், ரிங்கு செய்னி, லோகேஷ் சிங்லா ஆகிய நால்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் பஜ்ரங்தளம் அமைப்பை சேர்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. இவர்களில் ஒரு குற்றவாளி அடுத்த நாள் கைதானார். மேலும் இருவர் கடந்த ஏப்ரல் 14-இல் ராஜஸ்தான் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். எனினும், முக்கி யக் குற்றவாளியான மோனுவை ராஜஸ் தான் போலீஸாரால் கைது செய்ய முடிய வில்லை. இதற்கு ஹரியானா காவல் துறை தனக்கு ஒத்துழைப்பு நல்கவில்லை எனவும் புகார் நிலவியது.