districts

img

சர்வதேச பெண்கள் தின கருத்தரங்கம்

தக்கலை, மார்ச்.12- கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு  சார்பில் சர்வதேச பெண்கள் தின கருத்த ரங்கம் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் ஐடா ஹெலன் தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ரகுபதி வரவேற்றார். மாநில இணை செயலாளர் உஷா பாசி, மாநிலக் குழு உறுப்பினர் லீமா றோஸ், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் இந்திரா, சிஐடியு மாவட்ட பொருளாளர் சித்ரா, மருத்து வர் ஆல்பின் ஜாசி, மாதர் சங்க மாவட்ட தலைவர் மேரி ஸ்டெல்லா, தமுஎகச மாவட்டக்  குழு உறுப்பினர் சுஜா ஜாஸ்பின், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் சந்திரகலா ஆகி யோர் பேசினர். ஷீலா, சரோஜினி, காளி பிர சாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.