மதுரை, ஆக.17 -
இந்தியா, இலங்கை, கத்தார், மலேசியா, சிங்கப்பூர் நாடுகள் கலந்து கொண்ட சர்வதேச சிலம்ப போட்டி திருச்சியில் நடைபெற்றது.
இதில் 5 வயது முதல் 10 வயதுக் குட்பட்ட ஆண்கள் பிரிவில் மதுரை விகாசா பள்ளியில் 1 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர் சர்வின் பங் கேற்றார். சிறப்பாக சிலம்பம் விளை யாடிய ஜே.பி.சர்வின் தனித்திறமை போட்டியில் முதல் பரிசு பெற்றார். மாணவி எம்.கர்ஷிதா ஒற்றைக்கம்பு பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றார். மாணவி எம்.சான்ஷிதா ஒற்றைக்கம்பு பிரிவில் மூன்றாம் பரிசு பெற்றார்.
இந்த மூன்று மாணவ-மாணவி களையும், ஸ்ரீமாருதி சிலம்பம் பயிற்சி பள்ளி ஆசான் ராமகிருஷ்ணனையும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் அழைத்து பாராட்டினார். மாணவர்கள் கர்ஷிதா, சான்ஷிதா, சர்வினுக்கு பள்ளி முதல்வர் ஆறுமுகம், இணை ஒருங் கிணைப்பாளர் ஷியாமளா, மதுரை விராட்டிபத்து ஸ்ரீ மாருதி சிலம்ப பயிற்சி பள்ளி நிறுவனர் ஆசான் ராம கிருஷ்ணன் மற்றும் சேது லட்சுமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணே சன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.ரமேஷ், மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல், முன்னாள் மாமன்ற உறுப்பினர் க.திலகர், வடக்கு-1 ஆம் பகுதிகுழு செயலாளர் வி. கோட்டைச் சாமி, வடக்கு-2 ஆம் பகுதிக் குழு செயலாளர் ஏ.பாலு, மாவட்டக் குழு உறுப்பினர் கே.அலாவுதீன், சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.தெய்வராஜ், மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் மீனாட்சிசுந்தரம், பொதுச் செயலாளர் ம.பாலசுப்பிர மணியன் ஆகியோர் உடனிருந்தனர்.