தேச மகளிர் தின விழா மார்ச் 8 அன்று கொண்டாடப்பட்டது. தமிழ கத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இராமநாதபுரம் எல்ஐசியில் பணிபுரி யும் பெண்கள் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மஞ்சுளா தலைமை வகித் தார். பிரேமலதா வரவேற்றார். ஜன நாயக மாதர் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் இ.கண்ணகி, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க செயலாளர் முத் துப்பாண்டி சிறப்புரையாற்றினார். கண வனை இழந்த ஏழைப் பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
மதுரை
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மதுரை தல்லாகுளம் அருகில் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சு. கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் துணைக் குழு உறுப்பினர்கள் எஸ். பஞ்சவர் ணம், ஆர். முத்துலட்சுமி, எஸ். மாரி யம்மாள், எஸ். ஏ. பாண்டியம்மாள் ஆகி யோர் முன்னிலை வகித்தனர், இ. பானு வரவேற்று பேசினார், மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன் வாழ்த்திப் பேசினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட நிர்வாகி பா.மகாலட்சுமி, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலப் பொருளாளர் என். ஜெயச்சந்திரன் ஆகியோர் கருத்துரை யாற்றினர். மகளிர் துணைக்குழு உறுப் பினர் என். வான்மதி நன்றி கூறினார். பெண்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடை பெற்றது. மதுரை புதூரில் உள்ள அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் உலக மகளிர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. தலை மையாசிரியர் ஷேக் நபி தலைமை தாங்கினார்.
சிவகங்கை
மானாமதுரை செர்டு தொண்டு சமூக சேவை நிறுவனம் சார்பில் மகளிர் பேரணி -கருத்தரங்கம் நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளர் போதும் பொன்னு வரவேற்றார். முன்னதாக பேர ணியை வட்டாட்சியர் சு.சாந்தி தொடங்கி வைத்தார். திருவில்லிபுத்தூர் திருவில்லிபுத்தூர் மக்கள் சேவை மைய அமைப்பின் சார்பில் திருவில்லி புத்தூர் தலைமை அஞ்சலக மகளிர் களுக்கு பூஞ்செடிகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மக் கள் சேவை மைய செயல் தலைவர் பால கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.