பொதுவாக நம்மில் பெரும் பாலானோர் அமைதி யான சூழலில் வாசிப்ப தையே விரும்புவோம். காலையில் நாளிதழ் மற்றும் வார இதழ் தொடங்கி நாவல் வரை அனைத்தையும் படிப்பதற்கு நம் வீட்டருகே உள்ள வாசக சாலையிலோ அல்லது நூலகங்க ளிலோ சென்று படிப்பதுண்டு. அப்படிப்பட்ட வாசக சாலைகள் மதுரையில் தெருவுக்குத் தெரு இருந்தன. உலகத் தலைவர்கள் பெயர் தொடங்கி உள்ளூர் தலைவர்கள் பெயர் கொண்ட படிப்பகங்கள் மதுரையில் ஏராளம். அன்றைய காலகட்டத்தில் அனைத்து அரசி யல் கட்சிகளும் படிப்பகங்கள் வைத்திருந்தன.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல படிப்பகங்களை தற்போதும் பராமரித்து வரு கிறது. தனி அறையாக மின் விளக்கு மற்றும் மின் விசிறி வசதி கொண்ட படிப்பகங்களில் காலையில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வந்து நாளிதழ்கள் படிப்பர். பின்னர் மாலை நேரங்களில் கல்லூரிகளில் படிக்கும் மாண வர்கள் சிலர் தங்களின் மிகச் சிறிய வீடுகளில் படிப்பதற்கு போதிய வெளிச்சம் இல்லாத கார ணத்தினால் இந்த படிப்பகங்களில் தேர்வுக்காக வந்து படிப்பார்கள்.
போட்டித் தேர்வுக்ளுக்காக
நாளடைவில் படிப்பகங்களின் எண்ணிக் கை குறைய துவங்கியது, போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் எண் ணிக்கை அதிகரித்தது. போட்டித் தேர்வுகளே அரசு வேலை வாய்ப்புக்கான ஒரே வழி என்னும் இன்றைய சூழ்நிலையில் டிஎன்பி எஸ்சி உள்ளிட்ட அனைத்துவிதமான போட்டித் தேர்வுகளுக்கும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் நண்பர்களோடு கலந்துரையாடி படிக்க ராஜாஜி பூங்கா, காந்தி மியூசியம் மற்றும் மாநகராட்சி அலுவலக வளா கம் உள்ளிட்ட பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அங்கு சென்று படிப்பது வழக்கம்.
ராஜாஜி பூங்கா, காந்தி மியூசியம் ஆகிய இடங்களில் அமர்ந்து படிக்க போதிய வசதிகள் இல்லாத காரணத்தினால் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்டோர் படித்து வந்தனர். இருப்பினும் அந்த வளாகத்தில் அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் படிக்கும் மாணவர்களுக்கு இடையூறாக இருந்தது. பண வசதி படைத்தோர் பயிற்சி வகுப்பில் சேர்ந்தனர். ஏழை, எளிய மாணவர்களோ தன்னார்வ அமைப்புகள், காப்பீட்டு ஊழியர் சஙுகம், அரசு ஊழியர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகள் அவ்வப்போது நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ஆனாலும் போட்டித் தேர்வர்களுக்கான பிரத்யேக படிப்பக வளாகம் இல்லாதது அவர்களுக்கு பெருங் குறையாக இருந்தது.
சு.வெங்கடேசனின் முயற்சியால் ஒருங்கிணைந்த படிப்பக வளாகம்
அந்த வகையில் அனைத்துவிதமான போட்டித் தேர்வுகளுக்கும் தங்களைத் தயார்ப் படுத்தி கொள்ளும் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கென்று அமைதியான சுற்றுச் சூழல் கொண்ட ஒரு இலவச படிப்பக வளாகம் வேண்டுமென்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் முன் முயற்சி யால் உருவானது தான் காந்தி மியூசியம் அரு கே மாநகராட்சி நீச்சல் குளத்திற்கு அடுத்து இருக்கும் ஒருங்கிணைந்த படிப்பக வளாகம்.
சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி க்கு சொந்தமான இந்த இடத்தில் இயற்கை யான சூழலில் பசுமைப் பூங்காவை அமைத்தார். மதுரை மாநகராட்சி நமக்கு நாமே திட்டத் தின் வாயிலாக ரூ.45 லட்சமும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம் பாட்டு நிதியில் ரூ.30 லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ.75 லட்சம் செலவில் இந்தப் படிப்பகம் உரு வாக்கப்பட்டது. படிப்பதற்கென்றே உருவாக் கப்பட்ட இந்தப் பூங்காவில் மாணவர்கள் அமர்ந்து கலந்துரையாடி படிக்கும் வகையில், ஆங்காங்கே வட்ட வடிவிலான கூரைகள் மற்றும் சிமெண்ட் இருக்கைகள், அமைக்கப் பட்டுள்ளன. மழை பெய்தாலும் நனையாத வகையில் கூடாரமும் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள மரங்களைச் சுற்றிலும் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவைச் சுற்றிலும் மாணவர்கள் தவிர வெளியாட்கள் யாரும் உள்ளே வராத வகையில் கம்பிவேலி போடப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, கழிப்பறை, கண்காணிப்பு கேம ராக்கள் என சிறப்பான முறையில் அமைக்கப் பட்டு 28 ஜனவரி 2023-ஆம் ஆண்டு மாண வர்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. பின்னர் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கூடுதலாக ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் உணவருந்தும் கூடம், மரத்தினால் அமைக்கப்பட்ட இருக்கைகள் மற்றும் உயர் மின் கோபுர விளக்கும் மாண வர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப் பட்டது.
தற்போது நாளொன்றுக்கு 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை இங்கு வந்து படிக்கின்றனர். ரோட்டரி மிட் டவுன் கம்யூனிட்டி அறக்கட்டளை சார்பில், பராமரிப்புப் பணியை மேற்கொள்கின் றனர்.
இங்கு படிக்க வரும் மாணவர்களுக்கு காலையில் தென்புலம் அறக்கட்டளை சார்பில் இலவசமாக மோர் வழங்குகின்றனர். மாலை யில் தேநீர் அல்லது சிற்றுண்டி இலவசமாக தருவதை தன்னார்வலர்கள் செய்து வரு கின்றனர். பராமரிப்பில் வரும் கூடுதல் செல வினங்களை டிவிஎஸ் பள்ளி முன்னாள் மாண வர்கள் சங்கத்தினர் ஏற்றுள்ளனர். படிப்பவர்க ளைத் தவிர வேறு எவருக்கும் உள்ளே அனுமதி இல்லை. தினசரி வளாகத்தின் உள்ளே நுழையும் போது அனைவரிடமும் கையெ ழுத்து வாங்கப்படுகிறது,
படிக்காமல் குழுவாக அமர்ந்து அரட்டை அடித்தாலோ தனியாக அமர்ந்து அலைபேசி யை பார்த்துக் கொண்டிருந்தாலோ அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் எனக் கூறினர் சுழற்சி முறையில் வேலை பார்க்கும் பாது காவலர்கள். தற்போது அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், பத்திரிகையாளர் கள், எழுத்தாளர்கள் என முக்கிய பிரமுகர்கள் பலர் இந்த வளாகத்தை பார்வையிட்டு செல் கின்றனர். அதில் சில அரசியல் கட்சித் தலை வர்கள் தங்கள் பகுதியிலும் இதுபோன்ற பூங்கா அமைப்பதற்கு முயற்சி எடுக்கப் போவதாகவும் கூறினர்.
அருமையான சுற்றுச்சூழலில்...
மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த கணே சன் என்ற இளைஞர் கடந்த 1 வருடமாக குரூப் 4 தேர்வுக்காக தயாராகி வருகிறார் அவர் கூறும் போது, முதலில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து படித்தேன். பின்னர் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அமர்ந்து படித்தேன். அங்கே படிப்பதற்கு நல்ல வசதிகள் இருந்தும் குறிப்பிட்ட நேரம் காலை 8 முதல் இரவு 8 வரை மட்டுமே படிக்க முடியும். ஆனால், இந்த வளாகத்தில் அதிகாலை முதல் வந்து படிக்க முடிகிறது. மேலும் அனைத்து வசதிகளும் உள்ளதால் இங்கேயே வந்து எனது படிப்பை தொடர்கிறேன் என்றார்.
இந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் மிக அரு மையாக உள்ளதால் இங்கே அமர்ந்து படித்த 33 பேர் எஸ்ஐ உள்ளிட்ட சில போட்டி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் அதில் பெண் ஒருவர் மாநில அளவில் எஸ்ஐ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் ஒவ்வொரு குரூப் தேர்வு க்கு தயாராகும் மாணவர்கள் அந்தந்த குழுவுடன் இணைந்து சந்தேகங்களை கேட்டுப் படிப்பதற்கும் இங்கே வசதியாக உள்ளது.
படிப்பதற்கேற்ற அமைதியான சூழல் இங்கு உள்ளதாக தோழிகள் மூலமாக கேள்விப்பட்டு கடந்த நான்கு மாதமாக இங்கே வந்து குரூப் 2 மெயின் தேர்வுக்காக தயாராகி வரும் குன்னத்தூரைச் சேர்ந்த அருணா கூறினார்.
இங்கே படிப்பக வளாகம் வருவதற்கு முன்பு வரை இரவு நேரங்களில் இந்தப் பகுதி கும்மி ருட்டாக இருக்கும் காந்தி மியூசியம் வழி யாக தனியாக வரும் பெண்கள் யாரும் இப் பாதையை பயன்படுத்த மாட்டார்கள். படிப்பக பூங்கா வந்தபின் இரவு நேரத்திலும் மக்கள் தைரியமாக இந்த பாதையை பயன்படுத்து கின்றனர்.
படிப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவ்வழி யாக கடநது செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இந்த பூங்கா இருக்கின்றது எனக் கூறுகிறார் குரூப் 1 தேர்வுக்காக இந்த வளாகத்தில் படிக்கும் கருப்பாயூரணியைச் சேர்ந்த ஹேமலதா என்பவர். மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கல்வியின் மீதும் மாணவர்கள் மீது அதிகம் அக்கறை கொண்டவர்; அதனால் தான் தமிழ கத்திலேயே மதுரையில் தான் படிப்பதற் கென்றே ஒரு பிரத்யேக பூங்காவை உருவாக்கி யிருக்கிறார்; கல்வி கடனுக்காக சிறப்பு முகாம் கள் நடத்தியுள்ளார், சு.வெங்கடேசன் எம்பி., யாக தேர்ந்தெடுக்கப்பட்டது மதுரைக்கு மட்டு மல்ல ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்துக்கே வரம் எனப் பெருமிதத்துடன் கூறுகிறார் ஹேமலதா.
மீண்டும் அவரே வெல்ல வேண்டும்
‘‘இந்த முறை தேர்தலிலும் அவரே வெற்றி பெற வேண்டும்; அப்போது தான் மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி வெற்றி பெற முடியும்; ஏனெனில் மாணவர்களுக்கு ஏற்படும் இடையூறை அவர் கவனித்துக் கொள்வார்’’ என உணர்ச்சி பொங்க கூறினார் அவர்.
ஜென்னி