திருவில்லிபுத்தூர், ஆக.8- எல்ஐசியை பாதுகாப்போம்; பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் திரு வில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதி களில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது திருவில்லிபுத்தூரில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் கிளை தலைவர் கருணாகரன் தலைமை தாங்கி னார். இணைச் செயலாளர் ரமேஷ் பாண்டி துவக்கி வைத்தார். லியாபி முகவர் சங்க கிளைத் தலைவர் வள்ளிநாயகம், லிக்காய் முகவர்கள் சங்க கிளை செயலாளர் ராஜா, வளர்ச்சி அதிகாரிகள் சங்க செயலாளர் விஜயகுமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணை செயலாளர் சசிகுமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் முன்னாள் தலைவர் ஜெயக்குமார் அகில இந்திய இன்சூரன்ஸ் பென்சனர்கள் சங்கத்தின் நிர்வாகி குரு ராகவேந்திரன் ஆகியோர் பேசினர். பிரச்சார இயக்கத்தில் எல்ஐசி ஊழி யர்கள் கலைக்குழுவின் பாடல்கள், நாட கங்கள் தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன. புயல் கலைக்குழுவின் பாடகர் மரிய டேவிட் பாடல் பாடினார். இதே போல் ராஜபாளையம் நகரிலும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. சிவகாசி சிவகாசியில் எல்.ஐ.சி ஊழியர் சங்கத்தி னர் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடத்தி னர். சிவகாசியில் நடைபெறவுள்ள 67-ஆவது கோட்ட சங்க மாநாட்டையொட்டி நடை பெற்ற நிகழ்ச்சிக்கு சங்கர்மனோபாலாஜி தலைமையேற்றார். எஸ்.ரேணுகா வரவேற்றார். கோட்ட இணைச் செயலாளர் ரமேஷ்பாண்டியன் துவக்கி வைத்து பேசி னார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என். தேவா, பட்டாசு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.முருகன், ஜேசிடியு நிர்வாகி சந்திரராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மேலும் இதில் சிஐடியு தலைவர் ஆர். சுரேஷ்குமார், கமலகண்ணன், ராஜசேக ரன், ஏ.ராஜேந்திரன், கே.சண்முகம் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர்.