விருதுநகர்,மே 20- விருதுநகர் மாவட்டத்தில் புதிய குடிநீர்த் திட்டப் பணிகள் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை காலதாமதமின்றி விரை வாக முடிக்க வேண்டுமென வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரி யம் மற்றும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையேற்றார். சிவ காசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், சட்டமன்ற உறுப்பினர்கள் .ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், எஸ்.தங்கப்பாண்டியன், டாக்டர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். அப்போது, அமைச்சர் கூறுகையில், அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் விருது நகர் நகராட்சிகளுக்கான தாமிரபரணி ஆற்று நீரை நீர் ஆதாரமாக கொண்டு ரூ.444.71 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், இராஜபாளையம் மற்றும் சிவகாசி மாநகராட்சிகளில் ரூ.543.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி, சாத்தூர் நக ராட்சியில் ரூ.37.66 கோடியிலும், இராஜ பாளையத்தில் ரூ. 251.20 கோடியிலும் நடை பெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்பு, இப்பணிகளை விரைவாகவும், நேர்த்தியாகவும், காலதாமதமின்றி முடிக்க வேண்டும் எனவும், பணிகள் நிறைவடைய அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென வும் கேட்டுக் கொண்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் (நகராட்சி கள்) விஜயலெட்சுமி, மண்டல செயற்பொறி யாளர் சேர்மகனி, நகர்மன்ற தலைவர்கள் மாதவன் (விருதுநகர்), குருசாமி (சாத்தூர்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.