ஒட்டன்சத்திரம், ஜூலை 13- ஒட்டன்சத்திரம் அருகே மலைச்சாலையில் கொண்டை ஊசி வளைவில் வாகன விபத்து கள் ஏற்படாமல் தடுக்க மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் குவிலென்ஸ் கண்ணாடி பொருத்தவேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட மலைப் பகுதிகளுக்கான சாலை களில் கொண்டை ஊசி வளைவு களை காணலாம். வாகனங்களால் செங்குத்தாக மலையின் மீது முன் னேறிச் செல்ல இயலாத காரணத் தால் கொண்டை ஊசி வளைவு கள் மலைப் பயணங்களில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமா கும். தொடர்ச்சியான இத்தகைய வளைவுகள் சிலருக்கு தலைசுற் றல், மயக்கம் மற்றும் வாந்தி ஏற் படக் காரணமாக அமையலாம். கொண்டை ஊசி வளைவு என் பது மலைப் பகுதிகளில் அமைக் கப்பட்டுள்ள சாலைகளின் வடி வம் ஆகும். திண்டுக்கல் மாவட்டம் ஒட் டன்சத்திரத்தில் இருந்து மேற் குத்தொடர்ச்சி மலைப்பகுதியான வடகாடு, பரப்பலாறு அணை, பாச்சலூர், கே.சி.பட்டி வழியாக பெருமாள்மலை சென்று அங்கி ருந்து கொடைக்கானல் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இதில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து கே.சி.பட்டி வரை 42 கிலோ மீட்டர் தூரம் ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலைக்கு உட்பட்ட சாலையாகும். இந்த சாலையில் பல கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மலை மேல் வாகனங்களில் செல்பவர் களுக்கு எதிரே வரும் வாகனங் கள் சரியாக தெரியாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இந்த வளைவுகளில் வாகன விபத்துகள் ஏற்படாமல் தடுக்க மாநில நெடுஞ்சாலைத்துறை சார் பில், குவிலென்ஸ் கண்ணாடி (கான்வெக்ஸ் மிரர்) பொருத்தி னால் விபத்துகள் குறைய வாய்ப்பு உண்டு என்பதால் மலைச்சாலை யில் குவிலென்ஸ் கண்ணாடி பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மலைப் பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.