திண்டுக்கல், ஆக.6- தமிழ்நாடு அடிமனை பயனாளி கள் மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக திண்டுக் கல் மாவட்ட அளவிலான சிறப்பு பேரவை நடைபெற்றது. பேரவைக்கு சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஆர்.தயாளன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நட ராஜன் சிறப்புரையாற்றினார். அற நிலையத்துறை சட்டம் 34ன்படி பல தலைமுறையாக குடியிருந்தும், விவ சாயம் செய்தும், கடை நடத்தியும் வரும் பயனாளிகளுக்கு அந்தந்த இடங்களை நியாயமான விலைக்கு கிரயம் செய்து கிரய தொகையை தவணை முறையில் பெற்றுக் கொண்டு மேற்படி இடங்களை பயனாளிகளுக்கே சொந்தமாக்க வேண்டும். பொதுப்பயன்பாட்டிற் காக எனக் கூறி சிறு, குறு விவசாயி களின் விளைநிலங்களை பறித்து விவசாயத்தையும், விவசாயிகளை யும் அழிக்கக்கூடாது என்று தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட் டத்தலைவர் என்.பெருமாள், மாவட்டச்செயலாளர் எம்.ராம சாமி, முன்னாள் மாநில தலைவர் பி. செல்வராஜ், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச்செய லாளர் கே.அருள்செல்வன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். (நநி)