districts

img

மோடி அரசைக் கண்டித்து பிரச்சாரம்-மறியல்

சிவகங்கையில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

சிவகங்கை, ஆக.27-  சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு  கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில், மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஸ்ரீதர், எஸ்.கே.பொன்னுத்தாய் மற்றும்  மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  பின்னர் கே.பாலகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ‘‘மோடி ஆட்சி யில் விலைவாசி உயர்வு, வேலையில்லா பிரச்சனை போன்றவற்றால் மக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இவற்றை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம், மறியல் போராட்டம் நடத்த திட்ட மிட்டுள்ளது. இதன்படி, ரயில்வே நிலை யங்கள், தபால் அலுவலகம் முன்பு மறியல்  போராட்டம் நடத்தப்பட உள்ளது.

போராட்டத்  தில் ஒரு லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்’’  என்றார்.  மேலும் அவர், ‘‘தமிழ்நாட்டில் ஊழலைப் பற்றி பேசி வரும் அண்ணாமலை, சிஏஜி (CAG) வெளியிட்டுள்ள மோடி ஆட்சியின் ரூ7.50 லட்சம் கோடி ஊழல் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை?  காவிரி தண்ணீர் இல்லாததால் நான்கு  மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. வறட்சியால் விவசாயம் பொய்த்து போகும் அபாயம் உள்ளது. இத னால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. காவிரி ஆணை யம் பிறப்பிக்கும் உத்தரவை ஒன்றிய அரசே செயல்படுத்த முடியும். ஆனால் அதை செயல்படுத்துவதற்கு பதிலாக கர்நாடக அரசுக்கும் தமிழக அரசுக்கும் மோதலை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஒன்றிய மோடி  அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், அதி முக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமி, பாஜகவை கண்டிக்கவோ, கருத்து சொல்லவோ மறுக்கிறார்.  தமிழகத்தில் நியாய விலைக் கடைகள்  மூலம் வழங்கப்படும் அரிசி, மண்ணெண் ணெய்யின் அளவை குறைத்து மக்க ளுக்கும் மாநில அரசுக்கும் இடையே ஒரு முரணை ஏற்படுத்துவதற்கு மோடி அரசு முயற்சித்து வருகிறது.  எந்தவித அனுமதியும் பெறாத கோவை ஈசா மையத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது.  மேலும் தமிழக காவல்துறை அத்துமீறி பொய் வழக்கு போடுவது, சாதாரண மக்க ளுக்கு விரோதமாக செயல்படுவது தொடர்  பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சந்தித்து நட வடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட உள்ளது’’ என்றும் கூறினார்.