விருதுநகர், நவ.19- விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல குடியிருப்பு பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டது. பாலங்களை தாண்டி வெள்ளம் சென்றதால் போக்குவரத்து துண்டிக்கப் பட்டு பொது மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விருதுநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் நகரின் தெற்கு பகுதியில் உள்ள கௌசிகா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் செல்லும் தண்ணீ ரானது, குல்லூர் சந்தையை வந்தடையும். ஆனால், அந்த அணையும் சில தினங்க ளுக்கு முன்பே முழுக் கொள்ளவை அடைந்து நிரம்பி விட்டது. இதனால், அணையைத் தாண்டி வெள்ள நீர் மறுகால் பாய்கிறது. இந்த நிலையில், தொடர் மழை காரண மாக தண்ணீரின் வரத்து அதிகரித்தது. இத னால், அணையின் அருகில் உள்ள பாலத்தை தாண்டி வெள்ளம் சென்றது. எனவே, குல்லூர்சந்தை முதல் மாத்தநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாண விகள் வேறு சாலை வழியாக செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும், விருதுநகரின் வடக்கு பகுதியில் உள்ள வேலுச்சாமி நகர், டி.கே.எஸ்.பி. நகர், பெத்தனாட்சி நகர் மற்றும் லட்சுமி நகர் ஆகிய பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது. இப்பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடைகளில் தனியார் ஆக்கிரமிப்பு களை உரிய காலத்தில் அகற்றாத காணரத்தி னாலும், ஓடைகளில் முட்புதர்கள் அதிக அள வில் உள்ளதாலும், மழை நீர் எளிதாக அரு கில் உள்ள கௌசிகா ஆற்றுக்கு செல்ல முடியவில்லை. மாறாக குடியிருப்புகளைச் சூழ்ந்து மழை நீர் நின்றது. இதனால், அப்பகு தியைச் சேர்ந்த பொது மக்கள் தங்களது அன்றாட பணிகளைச் செய்ய முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.
மேலும், அருகில் உள்ள போக்குவரத்து பணிமனைக்குள் மழை நீர் சுமார் 3 அடி உயரத்திற்கு நின்றது. அதனை அகற்ற போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பேருந்துகளை பணிமனையின் வெளியேயும் உள்ளேயும் கொண்டு செல்வதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதேபோல், விருதுநகர் பகுதியில் உள்ள போலீஸ் பாலத்தை தாண்டி வெள்ள நீர் சென்றது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அய்யனார் நகர், அஹமது நகர், கலைஞர் நகர், வடமலைக்குறிச்சி சாலை ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடி யாமல் பெரும் பாதிப்படைந்தனர். பின்பு, மண் அள்ளும் வாகனம் வரவழைக்கப்பட்டு, ஓடையில் இருந்த முட்புதர்களை அகற்றும் பணி நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட நிர்வாகமானது, மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே, ஓடைகள் மற்றும் ஆறுகளில் உள்ள முட் புதர்களை அகற்றும் பணி மற்றும் கழிவு நீர் வாறுகால்களில் உள்ள மண் மேடுகளை அகற்றும் பணி, நீர்வரத்து ஓடைகளில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி ஆகியவற்றை செய்ய வில்லை. இதனால், இதுபோன்ற பாதிப்பு கள் ஒவ்வொரு மழைக் காலத்தின் போதும் தொடர்கதை போல் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இனி வரும் காலங்களிலாவது, இது போன்ற முக்கிய பணிகளை விரைவில் செய்தால், அதிக பாதிப்புகளை தவிர்க்க முடியும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.