districts

மதுரை முக்கிய செய்திகள்

கட்சியிலிருந்து நீக்கம்

மதுரை, நவ.8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மாநகர் மாவட்டக் குழு உறுப்பினராக செயல்பட்டு வந்த  எஸ்.சரண், கட்சி விரோத நடவடிக்கைகள் காரண மாக, மாவட்டக் குழு உறுப்பினர் மற்றும் கட்சியின்  அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப் பட்டுள்ளார். இத்தகவலை கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் வெளியிட்டுள்ளார்.

அரசு பேருந்து நிறுத்தம்: மாணவர்கள் அவதி 

திருவில்லிபுத்தூர், நவ.8-  திருவில்லிபுத்தூர் வட்டத்திற்குட்பட்ட மேற்கு  தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு உள்ளது.   இந்நிலையில் இந்த பகுதிக்கு காலை, மாலை என  இரண்டு வேளையும் அரசு பேருந்து சென்று வந்தது. தற்  போது இந்த பேருந்து மாலை மற்றும் இயக்கப்பட்டு வரு கிறது.  இதனால், செண்பகத்தோப்பிலிருந்து திருவில்லி புத்தூர் கல்வி பயில வரும் மலைவாழ் மக்களின் குழந்தை களும் விவசாயத் தொழிலாளர்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.  இதுகுறித்து அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் கூறும்போது, சாலையின் இருபுறமும் மரங்கள் அடர்த்தி யாக வளர்ந்து பேருந்து செல்ல முடியாத நிலைமை உள்ளது. சாலையின் இருபுறங்களிலும் வளர்ந்துள்ள மரக்கிளைகளை நெடுஞ்சாலை நிர்வாகம் அகற்றி சரி செய்தால் பேருந்து இயக்க முடியும் என்றனர்.

கழிவுகளை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் அழகப்பா பல்கலை.யில் திறப்பு 

சிவகங்கை, நவ.8-  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் முன்னாள் மாணவர் பூங்காவில் ரூ.22லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுகளை மறுசுழற்ச்சி செய்யும் இயந்திரத்தை துணைவேந்தர் ரவி திறந்துவைத்தார்.  பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பெறப்படும் கழிவுகளை பயோ கொம்போஸ்ட் மிசின்மூலம் மறு சுழற்சி செய்து பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து தோட்டங்களுக்கு இயற்கை உரமாக அளிக்கப்படும் என துணைவேந்தர் ரவி பேசினார்.  நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் ராஜமோகன், தாவரவியல் துறை தலைவர் பாண்டிமாதேவி, திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் முனைவர் ஆறுமுகம், பல்க லைக்கழக பசுமை வளாக ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிர மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரேசன் அரிசி கடத்தியவர்கள் கைது

விருதுநகர், நவ.8- விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை யினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, அந்த வழியாக வந்த கனரக வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 40 கிலோ எடை கொண்ட 26 சிப்பத்தில் 1040 கிலோ ரேசன் அரிசி  இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், வாகன உரிமையாளரான சங்க ரன்கோவில் பகுதியைச் சேர்ந்த சண்முகராஜ் (34),  அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் திருப்பதி வெங்கடேஷ் (31) மற்றும் சுமைப் பணியில் ஈடுபட்ட செல்வகுமார் (34) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். 

குளம், கண்மாய்களில்  குளிக்க அனுமதிக்க வேண்டாம்  ஆட்சியர் வேண்டுகோள்

விருதுநகர், நவ.8- வடகிழக்கு பருவமழை மாவட்டம் முழுவதும் பரவ லாக பெய்து வருகிறது. இதன் காரணமாக கண்மாய்கள், குளம் மற்றும் ஊருணிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், அருப்புக்கோட்டை வட்டம் பாலை யம்பட்டியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரின் குழந்தை கள் சித்தார்த் (8) மற்றும் சந்திரமணி (10) ஆகியோர் ஊரி லுள்ள ஊரணியில் குளிக்க சென்றபொழுது தவறி விழுந்த தில் இறந்து விட்டனர். இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள  கண்மாய், குளம் மற்றும் குட்டைகள் ஆகியவற்றில் குளிப்  பதற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், குறிப்பாக தங்கள் குழந்தைகளை அங்கு சென்று குளிப்பதற்கு அனு மதிக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசுப் பேருந்து மோதி  சிறுவன் பலி

நிலக்கோட்டை, நவ.8- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை ஜம்பு துரைக்கோட்டை கிராமம் -சக்கயநாயக்கனூர் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மதுரையில் இருந்து கோவை நோக்கி சென்றது.  அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அருள் ஆரோக்கி யம் என்பவரது 6-வயது மகன் அருள்கவின் டியூசன்  செல்ல சாலையை கடக்க முயன்றபோது எதிர்பாராதவித மாக பேருந்து மோதி தூக்கிவீசப்பட்டார்.  உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு  சக்கயநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்து வர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, சிறுவனின் உடலை கைப்பற்றிய அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் நிலக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை செய்து வருகின்றனர்.

மதுபாட்டிலால் குத்தி மாற்றுத்திறனாளி கொலை 

தேனி, நவ.8- உத்தமபாளையம் அருகே மாற்றுத்திறனாளி ஒருவர் மது பாட்டில்களால் குத்தி கொலை செய்யப் பட்ட சம்பவத்தில் ராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டியைச் சேர்ந்தவர் மொக்கைச்சாமி  மகன் சிங்கம் (47). இவர் மாற்றுத்திறனாளி ஆவார்.  திங்களன்று இரவு ஆனைமலையன்பட்டி சின்ன ஓவுலாபுரம் செல்லும் சாலையில் அங்குள்ள அரசு மது பான கடை அருகே மது பாட்டில்களால் குத்தி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராயப்பன்பட்டி காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.  பின்னர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட சிங்கத்துடன் சம்பவம் நடக்கும் முன்பு அவரது செல்போன் எண்ணில் பேசிய விவரங்களை காவல்துறையினர் சேக ரித்து விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சிறுமிக்கு பிரசவம்: போக்சோவில் கணவர் கைது

தேனி, நவ.8- கம்பத்தில் மைனர் சிறுமியை காதலித்து திருமணம் செய்து  குழந்தை பிறப்பிற்கு காரணமான கணவரை காவல்  துறையினர் கைது செய்தனர். கம்பம் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுமி. இவரது தாய்-தந்தையர் கேரளா வில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலை யில் சிறுமியை இதே ஊரைச் சேர்ந்த மகேஷ் என்பவர்  காதலித்து வந்துள்ளார். சிறுமிக்கு திருமண ஏற்பாடு நடந்த  நிலையில், கடந்த 25.10.2021-ஆம் தேதி கம்பத்தில் கோவி லில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், 17 வயது சிறுமி கர்ப்பமடைந்தார். இவரை கம்பம் அரசு மருத்துவமனையில் பிரச வத்திற்காக சேர்த்தனர். அப்போது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமி மைனர் என்பதால், மருத்துவ மனை நிர்வாகம் மூலம், உத்தமபாளையம் அனைத்து மக ளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது.  உத்தமபாளையம் மகளிர் காவல்துறையினர் விசா ரணை செய்து 17 வயது சிறுமியை திருமணம் முடித்ததாக இவரது கணவர் மகேஷ் என்பவர் மீது போக்சோ சட்டத்  தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

ஆசிரியையின் கணவர் கடத்தல்: 3 பேர் கைது

விருதுநகர், நவ.8- தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக காரில் கடத்  தப்பட்ட பள்ளி ஆசிரியையின் கணவரை விருதுநகர் அருகே சூலக்கரையில் காவல்துறையினர் மீட்டனர். தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்தவர் குருஸ் அலெக்சாண்டர். இவரது மனைவி பிரான்சிஸ் விண்ணரசி. இவர், அதே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரு கிறார்.   இந்நிலையில், திங்களன்று அவரது கணவர் குருஸ்  அலெக்சாண்டர், தான் ஒரு பிரச்சனையில் மாட்டியுள்ள தாகவும், 25 பவுன் நகை கொண்டு வந்தால் தான் தன்னை  விடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரான்சிஸ் விண்ணரசி, ஆழ்வார்திரு நகரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதங்ன பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் குரூஸ் அலெக்சாண்டரை, ஒரு இன்னோவோ காரில் சிலர் கடத்திச் செல்வதாக  காவல்  துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட அருகாமை மாவட்ட காவல்துறைக்கு தூத்துக்குடி மாவட்ட போலீசார் தக வல் தெரிவித்தனர்.  பின்பு, விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியில் வந்து கொண்டிருந்த இன்னோவா காரை விருதுநகர் நெடுஞ்சாலை ரோந்து  காவல்துறையினர் மடக்கி பிடித்த னர். பின்னர், விருதுநகர் சூலக்கரை காவல்நிலை யத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், குருஸ் அலெக்சாண்டர், ஆழ்வார் திருநகரி யைச் சேர்ந்த கல்யாண் குமார் என்பவரிடம் ரூ.21 லட்சத்து 91 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார் எனவும், அதை அவர்   திருப்பி தரவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கல்யாண்குமார், அவரை கடத்தி மிரட்டி அவரது குடும்பத்தினரிடம் பணத்தை  திரும்ப பெற திட்டம் இட்டதும் போலீசார் விசாரணை யில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, குரூஸ் அலெக்சாண்டர் மற்றும் ஓட்டுநர் அகம்மது அக்ரம், கல்யாண் குமார், பூல் பாண்டி ஆகியோரை ஆழ்வார் திருநகரி காவல்துறையினரிடம் விருதுநகர் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

மாட்டு தீவனத்துக்காக சத்துணவு  மாவு மூட்டைகள் கடத்தல்

மதுரை, நவ.8-  மதுரை மாவட்ட ஒருங்கி ணைந்த குழந்தைகள் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு அங்கன்வாடிகளி லும் கர்ப்பிணி பெண்களுக்கு மாதந்தோறும், 2 கிலோ சத்து மாவு, அங்கன்வாடி குழந்தை களுக்கு சத்துணவு மாவு உருண்டை வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் அங்கன்வாடி மையங்களிலிருந்து சத்துணவு மாவுகள் கடத்தப்படுவதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டும் எழுந்துவருகிறது. இதன்படி மதுரை மாநகராட்சி 74-ஆவது வார்டுக்குட்பட்ட பழங்காநத்தம் வடக்கு தெரு பகுதி உள்ள அங் கன்வாடி மையத்திலிருந்து திங்க ளன்று மர்ம நபர்கள் சிலர் அங்  கன்வாடியை நள்ளிரவில் திறந்து அங்கிருந்து தலா 25 கிலோ பாக்  கெட்டுகள் அடங்கிய 16 மூட்டை களை கடத்தியுள்ளனர்.  இந்நிலையில் சத்துணவு மாவு பாக்கெட்டுகள் கடத்தப்படு வதை அந்த பகுதி பொதுமக்கள் புகைப்படமாக எடுத்து காவல்துறை யினருக்கு புகார் அளித்துள்ளனர். இந்த சத்துணவு மாவு கடத்தல் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள மாடு வளர்க்கும் நபர் ஒருவருக்கு அங்கன்வாடி பணியாளர்களின் உறவினர்கள் உதவியோடு மாடுகளுக்கு வழங்கு வதற்காக கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.  இதனையடுத்து அப்பகுதி இளைஞர்கள் சிலர் அங்கன் வாடி அலுவலகத்தை முற்றுகை யிட்டு கடத்தல் குறித்து பணியா ளர்களிடம் கேட்டபோது உரிய விளக்கம் அளிக்காத நிலையில், சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.