மதுரை, ஜன. 9- மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் மயான ஊழியர்களுக்கு ஓய் வறை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் திறந்து வைத்தார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 4 லட்சத்தில் தத்தனேரி மயான ஊழியர்களுக்கான ஓய்வறை கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா ஜனவரி 9 திங்க ளன்று நடைபெற்றது. மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மாநகராட்சி மேயர் வ.இந்திராணி, மாந கராட்சி ஆணையளார் சிம்ரன்ஜித் ஜிங் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் மாநகராட்சி செயற் பொறியாளர் அரசு, 22 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மகாலெட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மா. கணே சன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பி. ராதா, என். ஜெயச்சந்திரன், பகுதிக்குழு செயலாளர் வி.கோட் டைச் சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.