திருவில்லிபுத்தூர், ஜூலை 17 விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் ஆண் டாள் கோவில் தேரோட்டத் திருவிழா வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிக ளவில் வரும் மக்களின் சுகா தாரத்தை பாதுகாக்கும் பொருட்டு நகராட்சி நிர்வா கத்தின் சார்பில் நகர் கிளைச் சிறைக்கு அருகில் ரூ.25 லட் சம் மதிப்பீட்டில் புதிய சுகா தார வளாகம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா திங்கள் கிழமையன்று நடைபெற் றது. நகர்மன்ற தலைவர் தங் கம் ரவிக்கண்ணன் திறந்து வைத்தார். சாத்தூர் ரோட்டில் அமைந்துள்ள திருவில்லி புத்தூர் நகராட்சிக்கு சொந்த மான சுகாதார வளாகம் புன ரமைக்கப்பட்டு மகளிர் பயன் பாட்டுக்காக நகர்மன்ற தலை வரால் திறந்து வைக்கப்பட் டது இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற துணை தலைவர் செல்வ மணி, நகராட்சி ஆணையா ளர் ராஜமாணிக்கம், நகர் மன்ற பொறியாளர் தங்கப் பாண்டியன், குடிநீர் விநி யோக மேற்பார்வையாளர் பவுன்குமார், சுகாதார அதி காரி ராமச்சந்திரன், சுகா தார ஆய்வாளர்கள் சரவ ணன் மற்றும் கந்தசாமி, 18 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தெரஸ் மற்றும் கவுன்சிலர் ஆறுமுகம் நக ராட்சி ஒப்பந்ததாரர் மணி கண்டன் கலந்து கொண்ட னர். சுகாதார வளாகம்திறப்பு விழா குறித்து நகர்மன்ற தலைவர் கூறுகையில், ஆண் டாள் கோவில் திருவிழா சிறப்பாக நடந்து கொண்டி ருக்கிறது.தினமும் ஏராள மான பக்தர்கள் வந்து செல் கின்றனர் தேரோட்டத்தன்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வர இருக்கின்றனர். இந்நிலையில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் அருகே ஒரே ஒரு சுகாதார வளாகம் மட்டும் உள்ளது.அது போதுமானதாக இல் லாத சூழ்நிலையில் பக்தர் கள் சிரமத்தை போக்குவ தற்காக கிளை சிறைச்சாலை அருகே புதிய சுகாதார வளா கம் கட்டப்பட்டு திங்களன்று திறக்கப்பட்டது. மேலும் மொபைல் டாய்லெட் இரண்டு வாகனங்கள் தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து எடுத்துவரப்பட்டு திரு முக்குளம்மேடு, திருப்பாற் கடல் ஆகிய இரண்டு இடங்க ளில் நிறுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் இதை பயன் படுத்திக் கொள்ளலாம். நான்கு ரத வீதிகளிலும் மற் றும் மாட விதிகளிலும் குடி நீர் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது என்று கூறினார்.