திண்டுக்கல்,மார்ச் 4- திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பேரூராட்சி தலைவ ராக நிருபாராணி ,துணைத்தலை வராக சிபிஎம் கவுன்சிலர் எம்.மலைச்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வெள்ளியன்று பேரூர் மன்ற கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் 10வது வார்டு திமுக கவுன்சி லர் நிருபாராணி தலைவருக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனையடுத்து வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பிற்பகலில் நடைபெற்ற துணைத்தலைவருக்கான தேர்தலில் 12 ஆவது வார்டு சிபிஎம் கவுன்சிலர் எம்.மலைச்சாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரையடுத்து யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெ டுக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வேட சந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.அருள்செல்வன், டி.முத்துச் சாமி, உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். (நநி)