மோடி அரசை விளாசியெடுத்த ஜான் பிரிட்டாஸ் எம்.பி.,
ஒன்றிய பாஜக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையை மையமாக வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், மோடி அரசின் போலித்தனங்களை மாநிலங்களவை யில் வரிசைப்படுத்தி அம்பலப்படுத்தினார். பிரிட்டாஸ் தனது பேச்சைத் துவங்கும்போது, ஒன்றிய பாஜக அரசு ஒருதலைப்பட்சமாக செஸ் மற்றும் கூடுதல் வரிகளை விதிப்பதால் கேரளத்திற்கு குறைந்தது ரூ. 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் சுட்டிக்காட்டினார்.
பேச்சின்போது குறுக்கிட்ட நிர்மலா சீதாராமன்
ஜான் பிரிட்டாஸின் இந்த பேச்சுக்கு இடையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையூறு வாதங்களுடன் எழுந்து நின்றார். ஆனால், “மாநிலங்களவையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் வெளியிட்ட புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி, வழங்கிய விவ ரங்கள் முழுமையற்றவை” என்று புள்ளிவிவர பாணியிலேயே சுடச்சுட பிரிட்டாஸ் பதிலளித்தார். “2010-11இல், ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில், செஸ் மற்றும் கூடுதல் வரியின் பங்கு 8.6 சதவிகிதமாக இருந்தது. 2021-22இல் இது 28.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, 15-ஆவது நிதிக் கமிஷன் பரிந்துரைத்த 41 சதவிகித வரிப் பங்கிற்குப் பதிலாக மாநிலங்களுக்கு உண்மையில் 30 சதவிகிதம் மட்டுமே கிடைக்கிறது” என்று ஜான் பிரிட்டாஸ் கூறினார்.
வாஜ்பாய் ஆட்சியை ஆய்வுக்கு எடுக்காத வெள்ளை அறிக்கை
“ஒன்றிய அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல; தேர்தல் அறிக்கை. நாட்டின் மிக முக்கியமான சமூக சீர்திருத்தங்கள் முதல் இடது சாரி ஆதரவு யுபிஏ அரசாங்கத்தின் போது செயல்படுத்தப்பட்டவை. கல்வியை அடிப்படை உரிமையாக்கியது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது, வேலை உறுதித் திட்டம் கொண்டு வந்து வேலைவாய்ப்பை உரிமை யாக்கியது, உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது ஆகிய அனைத்தும் இடதுசாரி ஆதர வுடனான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி யில்தான். முதல் யுபிஏ அரசாங்கத்தின் சாதனை களை நிதியமைச்சர் புகழ்ந்துபேசும் அதே வேளையில், அதற்கு முந்தைய வாஜ்பாய் அர சாங்கத்தை கண்டுகொள்ளாத வெள்ளை அறிக்கையின் முயற்சி சந்தேகத்திற்குரியது.
2011 கணக்கெடுப்பை பயன்படுத்தியது ஏன்?
பத்தாவது நிதி ஆணையத்தின் கால அளவில் கேரளத்துக்கு கிடைத்த வரி விகிதமான 3.875 சதவிகிதம், இப்போது 1.925 சதவிகிதமாக உள் sது. இவ்வாறு குறைந்ததற்கு நிதி ஆணை யத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு தன்னை பாதுகாத்துக் கொள்ள நிதியமைச்சர் முயற்சிக் கிறார். கடந்த 8 நிதி ஆணையங்கள் அணுகிய 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பை பதினைந் தாம் நிதி ஆணையம் தவிர்க்கவும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை பயன்படுத்தவும் ஒன்றிய அரசு உத்தரவிட்டது ஏன்? என்பதை நிதியமைச்சர் விளக்கவில்லை.
உ.பி., ம.பி. மாநிலங்களின் சொந்த வருவாய் எவ்வளவு?
கடந்த எட்டு நிதிக் கமிஷன்களால் முன்வைக்கப் பட்ட மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்திய கேரளம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் ‘நிதி ஆயோக்’ முடிவு செய்யும் வருவாய் பற்றாக்குறை மானி யத்தை ஒன்றிய அரசு தானே வழங்கி வருகிறது என நிதியமைச்சர் பேசினார். கேரளத்தின் சொந்த வருவாய் மாநிலத்தின் மொத்த வருவாயில் 78.7 சதவிகிதமாக உள்ளது. ஆனால், உத்தரப் பிரதேசத்தின் சொந்த வருவாய் 54 சதவிகிதமாக வும், மத்தியப் பிரதேசத்தின் சொந்த வருவாய் 51 சதவிகிதமாகவும் உள்ளது.
மோடி படத்துடன் செல்பி கார்னர் அமைக்க மட்டும் பணமிருக்கிறதா?
மோடியின் படத்துடன் ‘செல்பி கார்னர்’கள் அமைக்க பணம் செலவழிக்க ஒன்றிய அரசு தயாராக உள்ளது. ஆனால், ஒன்றிய அரசால் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு, மாநிலங்களிட மிருந்தே அதிகப் பங்கைக் கோருகிறது. அது மட்டுமல்லாமல், ஒன்றிய அரசின் முத்திரையை யும் பதிக்க வலியுறுத்துகிறது. மாநிலத் திட்டங்களை கூட ஒன்றிய அரசின் பிரச்சாரக் கருவியாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில பொதுவிநியோகத் திட்டத்தைப் புறக்கணி த்து, நேரடியாக கோதுமை, பருப்பு விநியோகம் செய்ய ஒன்றிய அரசு முயற்சிக்கிறது, அதுமட்டு மின்றி, தாமரை சின்னத்தை அவற்றின் மீது பதிக்க, ஒன்றிய அரசு கவனம் செலுத்துகிறது. மாறாக, ஒன்றிய அரசு கூட்டாட்சியை பாதுகாப் பதுபோல் போலித்தனமான அறிக்கைகளை வெளியிடுகிறது.
விவசாயிகளை சுட்டுக் கொன்றுவிட்டு சரண் சிங்கிற்கு ‘பாரத ரத்னா’வா?
மாநிலங்களவையில் மன்மோகன்சிங்கை பிரதமர் பாராட்டினார். மறுநாளே நிதியமைச்சர் மன்மோகன் சிங்கை கருப்புப்பட்டியலில் உட்ப டுத்தி வெள்ளை அறிக்கையுடன் அவைக்கு வந் தார். ஆனால் இன்னொரு நாள் வேண்டுமானால் மன்மோகன் சிங்கிற்கு ‘பாரத ரத்னா’ கொடுத்து கவு ரவிக்கலாம். அப்போது, மன்மோகன் சிங்குக்கு ‘பாரத ரத்னா’ கொடுக்கவில்லை என்று சோனியா காந்தியை குறை சொல்வார்கள், இதுதான் மோடி அரசின் அணுகுமுறை. போராட்டம் நடத்தும் விவ சாயிகளை சுட்டுக் கொல்லும் அரசுதான், விவசாயி களை மதிப்பதாக கூறி சரண் சிங்கிற்கு ‘பாரத ரத்னா’ வழங்குகிறது.” இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் பேசினார்.