தென்காசி , டிச. 2 குண்டாறு அணை அமைந்துள்ள கண்ணுப் புளிமேடு - செங்கோட் டை சாலையில் ஏ.ஜி அரசு உதவிபெறும் தொடக்கப் கள்ளி அருகே சாலை யோரத்தில் மின்கம்பம் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த மின்கம்பத்தில்உள்ள கம்பிகள்வெளியே தெரியும் வகையில் கரையான் அரித்தாற் போல் மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த மின்கம்பத்தில் இருந்து, சாலையின்எதிர்புறம் உள்ள மற்றொரு மின்கம்பத்திற்கு மின் வயர் சாலையின் நடுவில் செல்கிறது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே முறிந்து விழக்கூடிய அபாய நிலையில் உள்ளது. இதன் அருகே தான் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் செங்கோட்டை- குண்டாறு அணை பிரதான சாலை அமைந்துள்ளது. எனவே பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் நலன்கருதி, பழுதடைந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றி விட்டு, புதிய மின்கம்பம் நடுவதற்கு மின்வாரியத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.