districts

img

குமரியில் தொடரும் கடல் சீற்றத்தால் மீனவ கிராமத்தில் வீடுகள் இடியும் அபாயம்

நாகர்கோவில், ஜூலை 8- கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு, கொட்டில் பாடு மீனவ கிராமத்தில் கடல் அலை தடுப்பு சுவர் உடைந்து சேதம், குடியிருப்பு பகுதி யில் பள்ளம் ஏற்பட்டதால் வீடுகளும் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக குமரிக்கடல், கேரளா கடல் பகுதிகளில் சூறை காற்றுடன் கடல் சீற்ற மாகவே காணப்படும் எனவும் எனவே அந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட் டம் ராஜாக்கமங்கலம் முதல் தேங்காய் பட்டணம் வரையிலான மேற்கு கடற்கரை பகுதிகளில் இந்த வாரம்  சூநை காற்றுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டது இதனால் மேற்கு கடற்கரை பகுதிகளை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர் தொடரும் கடல் சீற்றத்தால் கடலோர கிராமங்களில் கடல் நீர் புகுந்து வீடுகளும் சேதமடைந்தன. ஜூலை 7 ஆம் தேதி இரவு முதல் கொட்டில்பாடு, குளச்சல்,சைமன் காலணி போன்ற கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்தால் கடலரிப்பு ஏற்பட்டது கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு கட்டப்பட்டிருந்த கடல் அலை தடுப்பு சுவர் சுமார் 30-மீட்டர் நீளத்திற்கு உடைந்து சேதமான நிலை யில் குடியிருப்பு பகுதிகளில் சுமார் 25-அடி  ஆழத்திற்கு மண் சரிவும் ஏற்பட்டது. இத னால் தொடர்ந்து வரும் கடல் சீற்றத்தால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.