திண்டுக்கல், டிச.30- தீண்டாமைக் கொடுமைகளு க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி னார். பழனியில் உபரி நிலம் மற்றும் பஞ்சமர் நிலம் மீட்பு சிறப்பு மாநாடு டிசம்பர் 30 வெள்ளியன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு சட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட உபரி நிலங்கள் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும். 15 ஆண்டுகளுக்கு முன்பு அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது அதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. பலர் நிலங்களை வாங்கி குவித்து வரு கிறார்கள். பழனி அருகே உள்ள ஆண்டிப் பட்டியில் நிலங்களை அதிகமாக வாங்கி குவித்துள்ளனர். ஏற்கனவே பெரியம்மாபட்டியில் 900 ஏக்கர் வரை உபரி நிலங்கள் இருந்தன .இந்த நிலங்கள் யாரிட மிருந்து நில உச்சவரம்பு சட்டத்தின் மூலம் கையகப்படுத்தப்பட்டதோ, அவர்களுக்கே அந்த நிலங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. அதேபோல சாதாரண ஏழை எளிய மக்களான தலித் மக்க ளுக்கு பஞ்சமர் நிலம் வழங்கப் பட்டது. அந்த பஞ்சமர் நிலமும் கூட இன்றைக்கு அவர்கள் கையில் இல்லை. பிற சமூகத்தினர் அந்த நிலங்களை வாங்கி குவித்து வைத்துள்ளனர். அந்த நிலங்க ளை கையகப்படுத்தி மீண்டும் அந்த தலித் மக்களுக்கு வழங்க வேண்டும். கடந்த பல ஆண்டுக ளாக அரசுகள் இதனை செய்ய வில்லை. நிலம் அற்றவர்களிடம் நிலம் இருந்தால் கிராமப்புறங்க ளில் வறுமை தாண்டவம் ஆடாது. நகரங்களை நோக்கி கிராம மக்கள் வேலை தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் நிலவுகின்றன. இந்த தீண்டாமை கொடுமைகளை ஒழித்துக் கட்ட தமிழக அரசு முன்வர வேண்டும். பல இடங்களில் தீண்டாமை கொடுமைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் என்ற கிராமத்தில் சாதி ஆதிக்க சக்தியினர் தலித் மக்கள் குடிக்கக்கூடிய தண்ணீரில் மலத்தை கலந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர் .இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீண்டா மைக்கு எதிரான சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் ஒன்றிய பாஜக அரசு பள்ளிகளில் தியானம் நடத்த வேண்டும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. விஞ்ஞான ரீதியான முன்னேற்றத்திற்கு பதி லாக தியானம் என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை பரப்புவ தற்காக இதுபோன்ற அரசு ஆணைகள் வெளியிடப்படு கின்றன. இந்தியாவில் 22 மொழிகள் அரசு அங்கீகாரம் பெற்ற மொழிகளாகும். ஆனால் ஒன்றிய அரசு சமஸ்கிருத மொழிக்கு மட்டும் அதிகமான கவனத்தை செலுத்தி வருகிறது. அதற்கு அதிகமான நிதியையும் ஒதுக்கி வருகிறது. தமிழ் போன்ற மூத்த மொழிக ளுக்கு சொற்ப நிதியை ஒதுக்கு கிறது. தமிழ் உள்ளிட்ட பிற மொழி களையும் ஆட்சி மொழியாக்குவ தற்கு ஒன்றிய அரசு முன்வர வேண்டும். தில்லி பல்கலைக்கழ கத்தில் தமிழ்நாடு அரசு தமிழ் மொழிக்கு என ஒரு இருக்கை ஏற்படுத்தி அதற்காக நிதி ஒதுக்கி உள்ளது. இதற்கு ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.