districts

நளினி வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 24 - அமைச்சரவை முடிவுப்படி விடுதலை செய்யக் கோரி ஆயுள் கைதி நளினி தாக்கல் செய்த மனுவை பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி அதிமுக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அதன்மீது நீண்ட காலமாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்தார். இதனையடுத்து ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் தன்னை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் வியாழனன்று (மார்ச் 24) விசார ணைக்கு வந்தது. நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதா கிருஷ்ணன், இந்திய அரசியல் சாசனம் 161வது பிரிவின் கீழ்  தீர்மானம் நிறை வேற்றி ஆளுநருக்கு அனுப்ப அமைச்சர வைக்கு அதிகாரம் உள்ளது. அமைச்சரவை பரிந்துரை ஆளுநரை கட்டுப்படுத்தும். அந்த பரிந்துரை மீது 42 மாதங்களாக எந்த முடிவும் எடுக்கா மல் இருப்பதால் தனது தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி நளினி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக வாதிட்டார். இதனையடுத்து நீதிபதிகள், இது வரை எண்ணிடப்படாமல் இருந்த இந்த மனுவுக்கு எண்ணிட்டு, விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தர விட்டனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுள் கைதிகள் விடுதலை செய்துள் ளதை போல 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ரவிச்சந்தி ரனையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுமென ரவிச்சந்திரனின் வழக்கறிஞர் வாதிட்டார். ஆயுள் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதி பதிகள், ரவிச்சந்திரன் தொடர்ந்த வழ க்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.