districts

கொரோனாவிலிருந்து குணமாகும் விகிதம் 98 சதவீதமாக அதிகரிப்பு

புதுதில்லி,செப்.25- கொரோனா தொற்றிலிருந்து குணமடைந் தோர் விகிதம் 98 சதவீதமாக  அதிகரித்துள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்ச கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதி தாக 29 ஆயிரத்து 616 பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 36 லட்ச த்து 24 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து ஆயிரத்து 442 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் வீதம் 0.90 சதவீத மாகக் குறைந்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 28 லட்சத்து 76 ஆயிரத்து 319 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 97.78 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 290 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 46 ஆயிரத்து 658 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 56 கோடியே 16 லட்சத்து 61 ஆயிரத்து 383 பேருக்கு மாதிரிகள் பரிசோ திக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 லட்சத்து 92 ஆயிரத்து 421 மாதிரிகள் பரிசோ திக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏறக் குறைய 84.89 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;