தேனி, அக்.8- பள்ளி ,கல்லூரி வளாகங்களின் அருகில் போதை பொருள் விற்பவர்களை கண்டறிந்து குற்றவியல் நட வடிக்கை மேற்கொள்ள தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரன் உத்தரவிட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளீதரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்ரே, மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா. தண்டபாணி, முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முரு கன், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சிந்து, உத்தம பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். போதைப் பொருட்களை பயன்படுத்தும் பள்ளி மாணவ, மாணவியர்களிடம் ஏற்படும் நடவடிக்கை மாற்றங் கள் குறித்து கண்டறியவும் மேலும் அவர்களை கண்கா ணித்து நல்வழிப்படுத்தவும், தேவையான திறன் குறித்து ஆசிரியர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தவும், மாணவர்களின் செயல்பாட்டில் மாற்றம் இருப்பின் அதனை அவர்களது பெற்றோர்களிடம் சுட்டிக்காட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உட்பட அனைத்து பகுதி களிலும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படு கின்றனவா? என்பதை முறையாக கண்காணித்து சம் பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற் கொள்ளவும், போதைப்பொருள் தடுப்பு காவல்துறை யினர் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ஆகி யோர்கள் மருந்தகங்கள், மொத்த விற்பனையாளர் நிறு வனங்களை முறையாக கண்காணித்து அவ்வப்போது கூட்டு ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.