தேனி, ஏப்.26- அங்கன்வாடி மையங்களை இணைக்கும் திட்டத்தை கைவிட அரசை வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் தமிழ் நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் இரண் டாவது நாள் போராட்டம் ஏப்ரல் 26 அன்று நடைபெற்றது.கோரிக்கை களை நிறைவேற்றுவதாக சமூக நலத் துறை அமைச்சர் உறுதியளித்தார்.இதைத்தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டாம் நாள் நடைபெற்ற காத்தி ருப்பு போராட்டத்திற்கு மாவட்டத் தலை வர் ஓ.சாந்தியம்மாள் தலைமை வகித் தார்.மாநில நிர்வாகி நாகலட்சுமி, மாவட்டச் செயலாளர் என்.வனிதா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மதுரை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மாவட்ட தலைவர் பி. ராஜேஸ் வரி தலைமையில் காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் வி. சாந்தி முன்னிலை வதித்தார், மாவட்ட செயலாளர் அ. வரத லட்சுமி கோரிக்கை களை விளக்கி பேசினார், சிஐடியு மாவட்ட தலைவர் ஆர். தெய்வராஜ், செயலாளர் இரா. லெனின், பொரு ளாளர் ஜே. லூர்துரூபி, உள்ளிட்ட தோழமை சங்க நிர்வாகிகள் ஆத ரித்துப் பேசினர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நிறைவு செய்து பேசினார். சிவகங்கை சிவகங்கையில்.மாவட்டத் தலை வர் ஜெயமங்கலம் தலைமையில் மாவட்ட செயலாளர் பாக்கியமேரி முன்னிலையில் போராட்டம் நடை பெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் சேதுராமன், மாவட்டத் தலைவர் வீரையா,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கண்ண தாசன் மற்றும் பலர் பேசினர்.