நாளை காரைக்குடி அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்
சிவகங்கை, அக்.24- காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் 35-ஆவது பட்டமளிப்பு விழா அக்.28 (திங்கள்கிழமை) மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு ஆளுநரும், அழகப்பா பல்கலைக்கழக வேந்தருமாகிய ஆர்.என்.ரவி, பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமை வகித்து மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்குகிறார். இந்திய மேலாண்மை நிறுவன இயக்குநர் பேரா.பவன்குமார் சிங் முதன்மை விருந்தினராக உரை நிகழ்த்து கிறார். தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சரும், அழ கப்பா பல்கலைக்கழக இணைவேந்தருமாகிய முனைவர் கோவி.செழியன் விழாவில் பங்கேற்று சிறப்பிக்கிறார். அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா.க. ரவி வரவேற்று உரை நிகழ்த்துகிறார். இந்த விழாவில் 3 பேர் அறிவியல் அறிஞர் பட்டமும், 93 பேர் முனைவர் பட்டமும், மேலும் பல்கலைக் கழகத்தின் பல்வேறு துறைகளில் பயின்ற 1,838 மாணவர்களும், இணைப்புக் கல்லூரிகளில் பயின்ற 11,835 மாணவர்களும், இணைவுக் கல்வித் திட்டத்தின் கீழ் பயின்ற 3,979 மாண வர்களும், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் வாயி லாக பயின்ற 24,306 மாணவர்களும் இணையவழிக் கல்வி யில் பயின்ற 379 மாணவர்களும் சேர்த்து ஆக மொத்தம் 42,433 மாணவ, மாணவியர்கள் பட்டங்கள் பெறுகின்ற னர். இதில் 277 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் நேரிடையாக வழங்கப்படவுள்ளது. அவர்களில் 3 அறிவி யல் அறிஞர் பட்ட ஆய்வாளர்களும், 93 முனைவர் பட்ட ஆய்வாளர்களும், 181 ரேங்க் பெற்றவர்களும், தங்கப் பதக்கம் பெற்றவர்களும் ஆவர். இந்த தகவலை துணைவேந்தர் பேரா.க.ரவி தெரி வித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 2 பேர் கைது
சிவகாசி, அக்.26- சிவகாசி அருகே திருத்தங்கல்லில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த இருவரை போலீ சார் கைது செய்தனர். திருத்தங்கல் போலீசார் அம்பேத்கர் சிலை அருகே ரோந்து சென்றனர். அப்போது, காமராஜர்புரம் காலனி யைச் சேர்ந்த தாளமுத்து(44) மற்றும் சுப்புராஜ்(40) ஆகி யோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி களை காகிதங்களில் எண்களை எழுதி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு முகாம் ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.26- திருவில்லிபுத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் முத்துச்செல்வம் தலைமை யிலான குழுவினர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு பாது காப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த பிரச்சாரம் மற்றும் செயல்முறை விளக் கங்கள் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் துண்ட றிக்கை விநியோகம் செய்யப்பட்டது.
பட்டாசுகளை பதுக்கி வைத்தவர் மீது வழக்கு
விருதுநகர், அக்.26- விருதுநகர் அருகே ஆமத்தூரில் செட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த வர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த னர். விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூ ரில் போலீசார் ரோந்து சென்றனர். அப் போது, தனியார் பட்டாசுக் கடை அருகே யுள்ள செட்டில் தடை செய்யப்பட்ட சர வெடிகள் மற்றும் கலர் பாம் இருப்பது தெரிய வந்தது. எனவே, பட்டாசுக் கடை உரிமையாளர் சிவக்குமார்(27) என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அறிவியல் மாநாட்டில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
இராமநாதபுரம், அக்.26- இராமநாதபுரத்தில் குழந்தைகள் அறி வியல் மாநாட்டில் பங்கேற்க பள்ளி மாண வர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டச் செயலாளர் கு.காந்தி, மாவட்ட தலைவர் ஜெ.ஜே.லியோன், மாவட்ட பொருளாளர் எம்.பாலமுருகன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப் பான்மையை வளர்க்கவும், ஆய்வு மாண வர்களாக உருவாக்கவும் அறிவியல் இயக் கம் தொடர்ச்சியாக குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது. அதேபோல இந்தாண்டும் 32 வது குழந்தைகள் அறி வியல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக “நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை” என்ற தலைப்பில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் இவற்றில் பயிலும் 11 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ ? மாண வியர்கள் இருவர் குழுவாக சேர்ந்து ஆய்வு களை மேற்கொள்ள வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் அல்லது கல்லூரி மாண வர்களின் வழிகாட்டுதலோடு 1.நீர் சூழலும் பாதுகாப்பும், 2. நீர் சார்ந்த பொது சுகாதா ரமும் மருத்துவமும், 3. நீர் சார்ந்த நோய்கள், 4. நீர் அனைவருக்குமானது, 5.நீர் பாது காப்புக்கான பாரம்பரிய மற்றும் நவீன தொழில்நுட்ப யுக்திகள் ஆகிய தலைப்பு களில் ஏதேனும் ஒன்றில் ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வுக் கட்டுரைகள் டிசம்பர் மாதம் இராமநாதபுரத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான மாநாட்டில் சமர்ப் பிக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் சிறந்த ஆய்வு கட்டுரைகள் மாநில அளவில் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் மாநா ட்டில் பங்கேற்கலாம். பங்கேற்கும் அனை வருக்கும் சான்றிதழும், வழிகாட்டும் ஆசி ரியர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும்.
பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க மேம்பாட்டுத் திட்ட பயிற்சி
தென்காசி, அக்.26- தென்காசி மாவட்டம் செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளியன்று, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி, மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் முன்னிலையில் நடைபெற்றது. ஆசிரியர்கள் புத்தாக்கச் சிந்தனையோடு செயல்பட்டு பல புத்தாக்க கண்டுபிடிப்புகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். புத்தாக்க மேம்பாட்டுத் திட்ட் பயிற்சியின் முடிவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் ரஞ்சனி, செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் புதிய பாஸ்கர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) பலவேசம் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நெல்லை மாவட்டம் முழுவதும் 41.64 செண்டிமீட்டர் மழைப்பொழிவு
திருநெல்வேலி, அக்.26- திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக நாங்குநேரியில் 51 மில்லி மீட்டரும், மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான நாலு மூக்கில் 46 மி.மீ, ஊத்து பகுதியில் 42 மி.மீ, காக்காச்சியில் 40 மி.மீ மாஞ்சோலையில் 31 மில்லி மீட்டர் மழைப்பொழிவும் சனிக்கிழமை நிலவரப்படி பதிவாகியுள்ளது. கொடுமுடி ஆறு அணைப்பகுதியில் 47 மில்லி மீட்டர் மழைப்பொழிவும், களக்காடு பகுதியில் 29.80 மி.மீ மழைப் பொழிவும், பாபநாசத்தில் 10 மி.மீ பாளையங்கோட்டையில் 9.4 மி.மீ, மணிமுத்தாறில் 10 மி.மீ, சேரன்மகாதேவியில் 9.6 மில்லி மீட்டர் அம்பாசமுத்திரத்தில் 8 மில்லிமீட்டர் மழைப்பொழிவு சனிக்கிழமை நிலவரப்படி பதிவாகியுள்ளது.