districts

img

ஆர்.எஸ்.எஸ் ஊதுகுழலாக ஆளுநர்: எம்.வி.கோவிந்தன் விமர்சனம்

திருவனந்தபுரம், அக்.26- ஆர்எஸ்எஸ் அமைப்பிற்காக அதன் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் எம்.வி.கோ விந்தன் தெரிவித்துள்ளார். 9 துணைவேந்தர்களை ராஜினாமா செய்யக் கூறிய ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து திருவனந்தபுரத்தில் இ.ஜ. முன்னணி தலைமையில் மாநிலம் தழுவிய போராட்டத்தை அக்டோபர் 25 செவ்வா யன்று எம்.வி.கோவிந்தன் தொடங்கி வைத்தார். அப்போது பேசுகையில், ஆளுந ருக்கு எதிரான போராட்டம் இரண்டு நாள் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியுடன் முடிந்துவிடாது என்றார். அனைவருக்கும் கல்வி உள்ள ஒரே மாநிலம் கேரளா. ஐஜமு ஆட்சியில் பல  பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த 5 ஆண்டு களில், இ.ஜ.மு அரசாங்கம் கிப்பி உதவி யுடன் மாநிலத்தில் பள்ளிகளின் உள் கட்டமைப்பை அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிக ரித்தது. பொதுக் கல்வித்துறை பெரிய அள வில் முன்னேறி வருகிறது. கேரளாவை அறிவுசார் சமுதாயமாக மாற்றுவதே குறிக்கோள். வேலையில்லாத் திண்டாட் டத்தை போக்க திட்டங்கள் தீட்டப்பட்டன.

எதிர்க்கட்சி தலைவரின் ஆளுநர் ஆதரவு நிலைபாடு ஆளுநரின் வகுப்புவாத நிலைபாட்டை எந்தவித தயக்கமும் இன்றி ஆதரித்த எதிர்க்கட்சித் தலைவர், இன்றோ நாளை யோ இல்லையென்றாலும் மதச்சார்பற்ற உள்ளடக்கத்தை ஏற்று தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிர்க்கட்சித் தலைவரின் நிலை பாட்டுக்கு எதிராக ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியில் கலகக் கொடி பறந்துள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும் காங்கி ரஸுக்கும், முஸ்லீம் லீகுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழவில்லை. ஆனால், ஆளுநரை ஆதரித்த எதிர்க்கட்சித் தலைவ ரை லீக் நிராகரிக்க வேண்டியதாயிற்று. கேரளாவின் உயர்கல்வி வலையமைப்பை அழிக்க ஆர்எஸ்எஸ்-ன் கருவியாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். ஆர்.எஸ்.எஸ்.காரர்களை துணை வேந்தர்கள் ஆக்க ஆளுநர் புறப்பட்டால் அதை செயல்படுத்தும் மாநிலமாக கேரளா இருக்காது. அரசர்களாக வேடமணிந்து, எதையும் செயல்படுத்துவது போல் நடிக்கும் பலரின் கடந்த கால அனுபவத்தை ஆளுநர் நினைவில் கொள்ள வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் அனாவூர்நாகப்பன் தலைமை வகித்தார்.