districts

சிரஸ்தா திட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு உத்தரவு!

மதுரை, செப். 9 -  பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தரமான உண்டு, உறைவிட கல்வி யை வழங்கும் நோக்கில், ஒன்றிய அரசால் ‘சிரஸ்தா’ (SHRESHTA) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இதற்கான தேர்வு தொடர்பான விபரங்கள் பட்டியலின மக்களுக்கு சரி யாக தெரிவதில்லை. 

விழிப்புணர்வு இல்லா ததால் குறிப்பிட்ட எண்ணி க்கை யிலானவர்களே விண்ணப்பிக்கின்றனர்.

எனவே, இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி விண்ணப்பிக்க போதுமான கால அவகாசமும் வழங்க வேண்டும்” என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை யில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

திங்களன்று இந்த மனு வை விசாரித்த நீதிபதிகள், ஆர்.சுப்பிரமணியன், எல்.  விக்டோரியா கவுரி அமர்வு, “‘சிரஸ்தா’ தேர்வு குறித்து  பெருமளவில் விளம்பரப் படுத்த எடுக்கப்பட்ட நட வடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய  வேண்டும்” என்று உத்தர விட்டுள்ளது.