districts

மதுரை முக்கிய செய்திகள்

அரசு ஊழியர் சங்க  மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை

இராமநாதபுரம், செப்.23- இராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பிரதிநிதித்துவ பேரவை,  நடைபெற்றது. மாவட்  டத் தலைவர் எம்.முருகேஸ்வரி தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமுருகன் அஞ்சலித்  தீர்மானம் வாசித்தார். ரோச நாரா பேகம் வரவேற்றார். மாநாட்டை மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் என். வெங்கடேசன் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலா ளர் பி.சேகர் வேலை அறிக்கையும், எச்.அப்துல் நஜ்மு தீன் வரவு-செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். சங்கத் தின் மாநில துணைத் தலைவர் சி.எஸ்.கிறிஸ்டோபர் நிறை வுரையாற்றினார்.  மாநாட்டில், மாவட்டத் தலைவராக எம்.முருகேஸ்வரி,  செயலாளராக பி.சேகர், பொருளாளராக அப்துல் நஜ்முதீன் மற்றும் துணை நிர்வாகிகளாக முனீஸ் பிரபு,  விஜய ராமலிங்கம், ஜெனிஸ்ட்டர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

டேபிள் டென்னிஸ் மதுரை அமெரிக்கன் கல்லூரி சாம்பியன்

மதுரை, செப்.23- மதுரை காமராசர் பல்கலைக்கழக அனைத்து மண்ட லங்களுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் செப்டம்பர் 22, 23  ஆகிய தேதிகளில் நடைபெற்றது.  லீக் முறையில் நடைபெற்ற போட்டிகளிலும் வெற்றி  பெற்று அமெரிக்கன் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.  தேனி கம்மாவர் கலைக்கல்லூரி 2-ஆம் இடத்தையும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி 3-ஆம்  இடத்தையும் பெற்றன. கல்லூரி முதல்வர் ம.தவமணி கிறிஸ்டோபர், துணை  முதல்வர் மார்டின் டேவிட், நிதிக் காப்பாளர் பியூலா ரூபி  கமலம், உடற்கல்வி இயக்குநர் மு.பாலகிருஷ்ணன் ஆகி யோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர். 

மீன் வியாபாரிகள் சங்கக்  கொடியேற்றுவிழா

தேனி, செப்.23- மீன் வியாபாரிகள் (சிஐடியு) சங்கக் கொடியேற்று நிகழ்ச்சி ஆண்டிபட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டியில் நடைபெற்றது. கிளைத் தலைவர் சி.வி.தமிழன் தலைமை வகித்தார். சங்கக் கொடியை ஆண்டிபட்டி ஜெனரல் சங்கத்  தலைவர். மா.கணேசன் ஏற்றி வைத்தார். சிஐடியு மாவட்ட  உதவிச் செயலாளர் எஸ்.ராமர். உறுப்பினர் அட்டை களை வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தேனி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி. வெங்க டேசன் வாழ்த்திப் பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர்  டி.ஜெயபாண்டி, மாவட்டப் பொருளாளர் ஜி.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ம கட்சி ஒன்றியச் செயலாளர் மா.தங்கராசு, ஆண்டிபட்டி ஜெனரல் சங்க செயலாளர் எஸ்.தங்கவேல், பொருளாளர் பி.சுப்புராஜ் வி.தொ.ச. ஒன்றியத் தலைவர் கே.தயாளன், அய்யர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நத்தம், செந்துறை, சிறுகுடியில்  மின் தடை: மக்கள் அவதி

நத்தம், செப்.23- திண்டுக்கல் மாவட்டம் நத்தம், செந்துறை, சிறுகுடி ஆகிய துணை மின் நிலையத்திலிருந்து சிறுகுடி, ஊராளி பட்டி, நத்தம், கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றி யுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினி யோகம் செய்யப்படுகிறது.  இந்நிலையில் கடந்த 3 நாட்களாக காலை, மாலை,  இரவு நேரங்களில் அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்தடையால் இரவு நேரங்களில்  கொசு தொல்லையால் மக்கள் மிகவும் அவதிப்படு கின்றனர். மேலும் இரவு நேரங்களில் மின்விசிறி இல்லாத தால் குழந்தைகளும் சிரமப்படும் நிலையே உள்ளது.  எனவே இனிவரும் நாட்களில் மின்தடை ஏற்படாமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

பொது சிவில் சட்டம்:  சிறப்புக் கருத்தரங்கம்

அருப்புக்கோட்டை, செப்.23- அருப்புக்கோட்டையில் ஒன்றிய பாஜக அரசின் ஆபத்தான பொது சிவில் சட்டம் குறித்து சிறப்புக் கருத்த ரங்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடை பெற்ற கருத்தரங்கிற்கு ஜெகநாதன் தலைமை வகித்தார்.  நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து, மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் எம்.தாமஸ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.கணேசன், பி.அன்புச்செல்வன் ஆகியோர் உட்பட  பலர் பங்கேற்றனர். பொது சிவில் சட்டப் பாதிப்புகள்  குறித்து வழக்கறிஞர் பெ.ரவீந்திரன் கருத்துரையாற்றி னார்.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் உயருகிறது

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை திண்டுக்கல், செப்.23- மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 51 அடியை  எட்டியதால் அணையிலிருந்து நீர் திறக்க வாய்ப்புள்ளது. அதனால் கரையோர மக்கள் எச்ச ரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளான பெருமாள் மலை, பாலமலை, பண்ணைக்காடு. உள்  ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீர் மட்டம் 51 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் முழுக் கொள்ளளவு 57 அடி ஆகும்.  இந்த நிலையில் தேனி, திண்டுக்கல் மாவட்டக்  கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டு மெனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மஞ்சளாறு  ஆற்றங்கரையோரப் பகுதிகளான கெங்குவார்பட்டி, தேவதானபட்டி, கல்லுபட்டி, தும்மலபட்டி, ஊத்தங் கல்பட்டி, புதுப்பட்டி, வத்தலகுண்டு பகுதி மக்களுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளனர். 53 அடியை நீர் மட்டம் எட்டியவுடன் இரண்டாம் கட்ட எச்சரிக்கையும், 57 அடியை எட்டியவுடன் மூன்றாம் கட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உபரி நீர் அணையிலிருந்து திறக்கப் படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். 

தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அபராதம்

மதுரை, செப்.23-  ஆசிரியருக்குப் பணி ஒப்புதல் வழங்கக்  கோரிய வழக்கில் 3 ஆண்டுகள் காலதாமத மாக நீதிமன்றத்திற்கு பதில் மனுத் தாக்கல்  செய்த தொடக்கக் கல்வி இயக்குநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ரோகினி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்  கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  மனுவில், ‘‘தனியார் பள்ளியில் இடை நிலை ஆசிரியராகப் பணியாற்றி வருவதாக வும், தனக்கு அரசுத் தரப்பில் பணி நியமன  ஒப்புதல் வழங்க வேண்டும். ஒப்புதல் வழங்  கக் கோரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலு வலகத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டது. விண்ணப்பம் நீண்ட காலமாக காத்தி ருப்பில் உள்ளதால் தனக்கு பணி ஒப்புதல்  வழங்க வேண்டும், ஒப்புதல் அளிக்கப்பட்ட  பின்பே ஊதியம் வழங்கப்படும் என்பதால்,  ஆசிரியர் பணி நியமன ஒப்புதலை அரசு  வழங்க உத்தரவிடக் கோரி 2019- ஆம்  ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி  பட்டு தேவானந்த் முன்பு சனிக்கிழமை விசா ரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதி மன்றம் (2019- ஆம் ஆண்டு) அரசுத் தரப்பு  பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதற்கு  மூன்றாண்டுகளுக்குப் பிறகு பதிலளிக்கப் பட்டுள்ளது. அளிக்கப்பட்டுள்ள பதிலும் திருப்திகரமாக இல்லை தாமதமாகப் பதிலளித்த தொடக்கக் கல்வி இயக்குநருக்கு ரூ.10 ஆயிரம் அப ராதம் விதித்த நீதிமன்றம், வழக்கு குறித்து  அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 13-ஆம் தேதிக்கு ஒத்தி  வைத்தார்.

முதல்வர் பற்றி அவதூறு பேச்சு :  இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு

விருதுநகர், செப்.23- விருதுநகரில் செப்டம்பர் 20 அன்று விநாயகர் சிலை  ஊர்வலம் நடைபெற்றதையொட்டி தேசபந்து மைதா னத்தில் அனைத்து பகுதியிலிருந்தும் விநாயகர் சிலை கள் கொண்டுவரப்பட்டன.  அப்போது, அங்கு வந்த இந்து முன்னணி விருது நகர் மாவட்டச் செயலாளர் சிவசாமி, கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் ஒலி பெருக்கியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அவரது  மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டா லின், சேகர் பாபு ஆகியோரைப் பற்றி அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசினர். இதுகுறித்து விருதுநகர் திமுக நகரச் செயலாளர் தனபாலன் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். அதன்பேரில் காவல்துறையினர், இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதிய வாக்காளர் அடையாள அட்டை  தேனி ஆட்சியர் வேண்டுகோள் 

தேனி, செப்.23- தேனி மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை  கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அஞ்சல் துறை மூலம்  அடையாள அட்டை வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  தேனி மாவட்டத்தில் 30.06.2023 வரை வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பம் செய்த வாக்கா ளர்களுக்கு, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் 9,697  வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டு அஞ்சல்  துறை மூலம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. பொது  மக்களும் குறிப்பிட்ட முகவரியில் தபால்காரரிடம் இருந்து  வாக்காளர் அடையாள அட்டையை விடுதலின்றி பெற்றுக்  கொள்ளலாம்.

கோழி கடைகளுக்கு அபராதம் 
திண்டுக்கல், செப்.23- திண்டுக்கல் மாவட்டத்தில் சுகாதாரமற்ற கோழி இறைச்சிகடைகளை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்பு  அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.  உணவுப் பாதுகாப்பு அதிகாரி செல்வம், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் திண்டுக்  கல் நாகல் நகர், குள்ளனம்பட்டி, பகுதிகளில் உள்ள  16 கோழி இறைச்சிக் கடைகளில் சோதனை நடத்தில். இதில் மூன்று கோழி இறைச்சிக் கடைகளில் சுகாதார மற்று விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இந்தக்  கடைகளுக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்  பட்டது. வாடிக்கையாளர்களுக்கு விற்க வைத்திருந்த 25 கிலோ பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப் பட்டன.

வரி செலுத்தாமல் ஏலக்காய் கடத்தல்  அபராதம் விதித்த வணிக வரித்துறை

தேனி, செப்.23- தேனி மாவட்ட வணிகவரித்துறை அதிகாரி கனகராஜ்  தலைமையிலான குழுவினர் போடி முந்தல் அருகே நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது போடிமெட்டு மலைச்சாலையில் இருந்து வந்த ஜீப்பை  சோதனை செய்தனர்.அதில் வரி செலுத்தாமல் ஏலக்காய்களை விற்பனைக்குக் கொண்டு சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து ஜீப் ஓட்டுநர் ராஜாவிடம் விசா ரணை நடைபெற்றது.இதில் 23 மூடைகளில் 900 கிலோ  ஏலக்காய்கள் இருப்பது தெரிய வந்தது. ஏலக்காயை கடத்திய குற்றத்திற்காக ரூ.1.54லட்சம் அபராதம் விதிக் கப்பட்டது.அடுத்தடுத்து இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டால் ஜீப், ஏலக்காய்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறப்பு மருத்துவ முகாம்

திண்டுக்கல், செப்.23- திண்டுக்கல் மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் கலைஞரின் வரு முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை திண்டுக் கல் மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்.  திண்டுக்கல் லூர்து மாதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் திண்டுக்கல் மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் கலை ஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.  முகாமை திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதிபிர காஷ், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் துவக்கி வைத்த னர். திண்டுக்கல் நகர் நல அலுவலர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.திண்டுக்கல் அரசு மருத்துவ மனையிலிருந்து சிறப்பு மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு மக்களுக்கு பொது மருத்துவம், காது-மூக்கு-தொண்டை, சித்த மருத்துவம், மகப்பேறு மருத்துவம், கொரோனா தடுப்பு ஊசி, குழந்தைகளுக்கான மருத்து வம், உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆலோ சனைகள், சிகிச்சையளித்தனர்.  முகாமில் பேகம்பூர், சவேரியார் பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஒன்றியக் குழு கூட்டம்

சின்னாளப்பட்டி, செப்.23-  திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியக்  குழு கூட்டம் ஒன்றிய தலைவர் சிவ குருசாமி தலைமை யில் நடைபெற்றது.  துணைத்தலைவர் ராஜேஸ்வரி, ஆணையாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன் வரவேற்றார். துணைத் தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன் நன்றி கூறினார்

வீடு இடிந்து விழுந்து பெண் காயம்

நத்தம், செப்,23- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஒரு மணி நேரத்  திற்கு மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அப்போது நத்தம் அருகே பாத சிறுகுடியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி என்பவரின் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் அவரது மனைவி முனியம்மாள் (43)  காயமடைந்தார்.

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை 
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி, செப்.23- நீர்ப்பிடிப்புப் பகுதி மற்றும் மாவட்டத்  தில் பரவலாக மழை பெய்ததால் அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது . கடந்த சில நாட்களாக மஞ்சளாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் மழை  பெய்து வருகிறது. இதனால் அணையின்  நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கி யுள்ளது. சனிக்கிழமை காலை நில வரப்படி நீர்மட்டம் 51.80 அடியாக இருந்  தது. இதைத் தொடர்ந்து தேவதா னப்பட்டி, கெங்குவார்பட்டி, வத்தலக் குண்டு, பழைய வத்தலக்குண்டு, குன்னு வாரான்கோட்டை மற்றும் அதன்சுற்று வட்டார கிராமங்களுக்கு முதற்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள் ளது. அணைக்கு 131 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் திறப்பு இல்லை. நீர்பிடிப்புப் பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 822 கனஅடி. நீர்மட்டம் 119.25. அணையிலிருந்து தமிழ கப் பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.  வைகை அணை நீர்மட்டம் 48.36 அடியாக உள்ளது. 425 கனஅடிநீர் வரு கிறது. மதுரை மாநகர் குடிநீருக்காக 69 கன  அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 83.31 அடியாக உள்ளது.  22.09 கனஅடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.  மழையளவு  அரண்மனைப்புதூர்-5.6, பெரியகுளம்- 10.2, பெரியாறு-17, தேக்கடி- 9.2, சண்முகா நதி- 3.4, மஞ்சளாறு- 8, சோத்துப்பாறை-1, வைகை அணை-23 ,போடி-1.6, உத்தம பாளையம்- 3.2, கூடலூர்-4, வீரபாண்டி-12.8,  மி.மீ மழை பதிவாகி உள்ளது.