districts

img

பரமக்குடியில் சிஐடியு ஊரக வளர்ச்சி - உள்ளாட்சி ஊழியர்கள் போராட்டம்

இராமநாதபுரம்,செப்.28-  இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் 8 ஆண்டுகளாக டெங்கு தடுப்பு மற்றும் கொரோனா கால பணிகளை சிறப்பாக செய்த பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும்/ இது தொடர்பாக 14-8-2022 இல் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் குறித்து விசாரித்து நகராட்சி நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் இபி எஃப் பணம் பிடித்தது தொடர்பாக உடனே விசாரணை நடத்த வேண்டும். குடிநீர், டெண்டர் தொடர்பான மற்றும் தூய்மைப்பணி உள்ளிட்ட  முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என சங்கத்தின் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.  இது தொடர்பாக பரமக்குடி நகராட்சி முன்பாக சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக  காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம். அய்யாத்துரை தலைமை வகித்தார் .மாவட்டத் தலைவர் பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.சந்தானம், மாவட்ட துணைச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர் .பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.