பழனி, ஆக.26- சந்திரனின் தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமை யையும் சந்திரனில் கால் பதித்த நான்கா வது நாடு என்ற பெருமையையும் சந்தி ரயான்-3 திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் செயற்கைக் கோள் மையத்தின் இயக்குநர் சங்கரன், திட்ட இயக்குநர் வீரமுத்து ஆகியோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில், சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவற்றை பெங்களூரில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இயக்குவதற்கான ஆணைகளை பிறப்பிக்கும் டெலி கமாண்ட் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கௌரி மணி செயல்பட்டுள்ளார். இவர் சுமார் 23 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் செயற்கைக்கோள் விஞ்ஞா னியாக பணியாற்றி வருகிறார். 50 வய தாகும் இவர் தொலை தொடர்பு பொறி யியலில் எம்.இ., பட்டத்தை மதுரை தியாகராஜா கல்லூரியில் பயின்றுள் ளார். இவரது கணவர் டாக்டர் வீ.ராம ராஜ் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரு கிறார்.