districts

img

தேனி நகரில் தேங்கிய குப்பைகள் நடவடிக்கை எடுத்த தேனி ஆட்சியர்

தேனி, மார்ச் 16- தேனி நகராட்சி பகுதிகளில் தேங்கிய குப்பைகளால் அவதி யடைந்த பொது மக்கள், தேனி ஆட்சியரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத் திற்கு நேரில் சென்று குப்பை கழிவுகளை அகற்ற உடனடி நட வடிக்கை மேற்கொண்டார். தேனி-அல்லிநகரம் நக ராட்சிக்குட்பட்ட நாடார் சரஸ் வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மற்றும் கரு மாரியம்மன் கோவில் தெருவி லுள்ள கண்மாய் ஆகிய பகுதி களில் குப்பைகள் தேங்கிக் கிடப்ப தாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீ தரன் தேனி-அல்லிநகரம் நக ராட்சிக்குட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் குப்பைகள் தேங்கி கிடப் பதை அகற்றிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்த ரவிட்டதை தொடர்ந்து, அப்பகு தியில் குப்பைகள் உடனடியாக அகற்றப்பட்டது. கருமாரியம்மன் கோவில் தெருவிலுள்ள கண் மாய் பகுதியில் ஜேசிபி இயந்தி ரங்களை கொண்டு குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதிகள் பள்ளி மற்றும் பொதுமக்கள் அதிக நடமாடக் கூடிய இடமாக அமைந்துள்ள தால், பொதுமக்கள் இப்பகுதி யில் குப்பைகளை கொட்டாமல் இருந்து, சுற்றுப்புறங்களை சுத் தமாகவும், சுகாதாரமாகவும் வைத் துக் கொள்வதற்கு நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப் பினை வழங்கிட வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொண் டார். மேலும், இப்பகுதியில் பொது மக்கள் குப்பைகளை கொட்டா மல் இருப்பதினை கண்காணித் திட சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களுக்கு உத்தரவிட்டார்.