districts

img

காந்திகிராம நிறுவனர் பிறந்தநாள் விழா

சின்னாளப்பட்டி, ஆக.20- திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் அறக்கட் டளை, காந்திகிராமம் பல்கலைக்கழகம், கஸ்தூரிபா மருத்துவமனை, தம்பித்தோட்டம் பள்ளி உட்பட காந்தி கிராமத்தின் நிறுவனங்களை உருவாக்கிய டாக்டர் டி.எஸ்.சௌந்தரம் அம்மா அவர்களின் 118வது பிறந்த நாள் விழா கிராம சுகாதார குடும்பநல ஆராய்ச்சி நிறு வனத்தின் வளாகத்தில் நடைபெற்றது.  இந்த விழாவிற்கு காந்திகிராம சுகாதார குடும்பநல நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர். எஸ்.சீத்தா லெட்சுமி  தலைமை தாங்கினார். பத்மபூஷன் விருது பெற்ற கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், காந்திகிராமம் அறக் கட்டளை அறங்காவலர் கே.சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் டாக்டர் சௌந்தரம் அம்மாள் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் நிகழ்ச்சியை துவக்கிவைத்து உரையாற்றினார். சுகாதார குடும்ப நல பயிற்சி மைய மாணவ மாணவி யர்கள் மத்தியில் அவர் பேசுகையில், மதுரையில் மறவர்  சாவடியில் கிளினிக் அமைத்து ஏழை எளிய மக்க ளுக்கு மருத்துவ சேவை செய்து வந்த டாக்டர் சௌந்தரம் அம்மாள் அவர்களின் சமூக சேவையால் ஈர்க்கப்பட்டு அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பினை பெற்றேன். குறிப்பாக டாக்டர் சௌந்தரம் அம்மாள் கிராமங்களில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியதில் முக்கிய பங்காற்றினார். அதன்பின்னர் காந்தி கிரா மத்தை உருவாக்கி தொடர்ச்சியாக அறக்கட்டளையை கொண்டுவந்து ஆதரவற்ற குழந்தைகளுக்காக சௌ பாக்கியா இல்லம், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற விதவைகளுக்கு சேவிகாசிரமம் பள்ளி, ஏழை எளிய மாணவர்கள் பயில தம்பித்தோட்டம் பள்ளி, காந்திகிராமம் பல்கலைக்கழகம், கஸ்தூரிபா மருத்தவமனை, குடும்பநல பயிற்சி மையம், உட்பட பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி அழியா புகழ்பெற்றவர் என்று தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் குடும்பநல பயிற்சி மைய முதல்வர் ஜெ.புனிதாசெல்வி, மக்கள் தொகை ஆராய்ச்சி நிலைய  மருத்துவர் கவிதா, குடும்பநல பயிற்சி மைய முதல்வர்  டாக்டர் சத்யா, நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.