காரியாபட்டி, மே 24- கேரளாவில் இடது ஜனநாயக முன் னணி அரசு வழங்குவதைப் போல தமிழ்நாடு அரசும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும் என்று காரியாபட்டி பொதுக்கூட்டத்தில் சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் சிஐடியு சார்பில் நடைபயண பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டச் செயலாளர் எம்.முகமது அலி ஜின்னா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் பி.ராமர், சிபிஎம் வட்ட செயலாளர் ஏ.அம்மாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கி வைத்து மாநில உதவித் தலைவர் ஆர்.ராஜேந்திரன் பேசினார். மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஜி.சுகுமாறன் பேசிய தாவது: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசானது, விவசாயி களுக்கும், விவசாயத்திற்கும் விரோத மான 3 வேளாண் சட்டங்களை நிறை வேற்றியது. அதை எதிர்த்து தலைநகர் தில்லியில் விவசாயிகள் ஒரு வருட காலம் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தினர். அதன் பிறகே அச்சட் டத்தை திரும்பப்பெற்றனர். அப்போது விவசாயிகள் மேலும் சில கோரிக்கை களை முன் வைத்தனர். அதில் முக்கிய மானது, தாங்கள் விளைவிக்கும் பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்திட வேண்டும். உற்பத்தி செய்யும் உணவுப் பொருளுக்கான சந்தையில் விலை குறையும் போது அதை அரசே விவசாயி களிடம் கொள்முதல் செய்து சேமிப்புக் கிடங்கில் வைக்க வேண்டும் என்று விவ சாயிகள் வலியுறுத்தினர்.
இந்தியாவில் கேரளாவைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் நடைமுறையில் இல்லை. கேரள அரசு விலையை நிர்ணயம் செய்துள்ளது. தமிழ்நாடு அரசும் இதை அமல்படுத்த வேண்டும். உலகத்தில் எங்குமே நடைபெறாத ஒரு விஷயம் இந்தியாவில் நடைபெற் றுள்ளது. அது என்னவெனில் கடந்த ஒரு வருட காகலமாக பெட்ரோல், டீசல் விலை உயரவில்லையென கொண்டா டியுள்ளனர். இதைவிட கேவலம் எது வும் இருக்க முடியாது. காரணம் என்ன வெனில், ஒன்றிய மோடி அரசு, மிகக் குறைந்த விலைக்கு கச்சா எண் ணெய்யை வாங்கிக் கொண்டு, உல கத்தில் எங்குமே இல்லாத வகையில் வரிமேல் வரி போட்டு, அதிக விலைக்கு மக்களிடம் பெட்ரோல், டீசலை விற்று வருகிறது. இதில் கொண்டாட என்ன இருக்கிறது. ஒரு தாய் தனது குழந் தைக்கு தினமும் பாலூட்டியதை பெரு மையாக கூற முடியுமா? அது அவரது கடமையாகும். கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் பாஜக அரசு ஒரு பொதுத்துறை நிறுவ னத்தைக் கூட உருவாக்கவில்லை. ஆனால், ஏற்கனவே உள்ள பொதுத் துறைகளை தனியாரக்கு தாரை வார்த்து வருகிறது. இதனால், இயல் பாகவே செங்கொடி இயக்கத்திற்கு பெரும் கோபம் வருகிறது. அதற்கு காரணம், இந்தியாவில், தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் உரு வாக தொழிற்சங்கத் தலைவர்களும் கம்யூனிஸ்ட்களும் பெரும்பங்காற்றி யுள்ளனர். பொதுத்துறைகள் இல்லாவிட் டால் இட ஒதுக்கீடு என்பது இருக் காது. சாதாரண ஏழை எளிய மற்றும் பட்டியலின மக்கள் பணிப் பாதுகாப்பு டன் கூடிய நல்ல வேலைக்கு செல்ல முடியாது. எனவே, பொதுத்துறைகள் விற்கப்படுவதை எதிர்த்து சிஐடியு தொடர்ந்து போராடி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இதில், சிஐடியு நிர்வாகிகள் பரம சிவம், நல்லுராமன், பெத்து, முத்து, கண்ணன், ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.