திருவில்லிபுத்தூர், ஜூலை 24- திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் கோட்டைப் பட்டி ஊராட்சி பகுதியில் ஊராட்சி மன்றமும் கலச லிங்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து இலவச பொது மருத்துவ முகாமை நடத்தின முகாமிற்கு கோட்டைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். கலசலிங்கம் மருத்துவமனையின் மருத்துவர் இராமநாதன் தலைமையிலான மருத்துவர்கள் ,செவி லியர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் அலுவலர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். மருந்து மாத்தி ரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. முகாமிற்கான ஏற் பாடுகளை ஊராட்சி செயலர் செலினா செய்திருந்தார்.