districts

மீனவர் சமூக இளைஞர்களுக்கு வாய்ப்பு

திருநெல்வேலி, நவ.18- மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளை ஞர்கள் இந்தியக் குடி மைப் பணிகளில் சேருவ தற்கான போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப் படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு:-  மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளை ஞர்கள் இந்தியக் குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயனாளி மீனவர் சமுதா யத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். பெற்றோர், பாது காப்பாளர் மீனவ கூட்டுறவு சங்கம், மீனவர் நல வாரி யத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். வயது 1.8.2023-இல் 21 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற் படுத்தப்பட்டவராக இருந்தால் 35 வயது வரை யிலும், ஆதிதிராவிடர், பழங்கு டியினராக இருந்தால் 42 வயது வரையிலும் இருக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பல் கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு பயின்றிருக்க வேண்டும்.  பன்னிரெண்டாம் வகுப் பில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். படிப்பு முடித்து வேறு பணிகளில் இருந்தாலும் தகுதியிருப்பின் இந்தப் பயிற்சியில் சேரலாம். விண் ணப்ப படிவங்களை www.fisheries.tn.gov.in<http://www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  மேலும் விவரங்களுக்கு அந்ததந்த மாவட்ட மீன் வளம், மீனவர் உதவி இயக்கு நர் அலுவலகங்களை அணுக லாம்.