சிவகங்கை, ஆக.20- சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயி லும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு மொத்தம் 3359 காலிப்பணியிடங்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்விற்கான இல வச பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 25 முதல் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 1 மணி வரை இவ்வலு வலகத்தின் வாயிலாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரக மயில் கேட் அருகிலுள்ள படிப்பு வட்டத்தில் நடைபெறவுள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு-28 அரசு விதிமுறை களின் படி வயது வரம்பு தளர்வுகளும் உண்டு இத்தேர்விற்கு செப்டம்பர் 17 வரை விண்ணப்பிக்கலாம். இணையவழி விண்ணப்பம் செய்ய www.tnusrb.tn.gov.in என்ற முக வரியை பயன்படுத்திக்கொள்ளவும் . இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் 04575- 240435 என்ற அலுவலக எண்ணிலோ அல்லது நேரிலோ வருகை புரிந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள லாம். மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்து வருகின்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக தொடங்கப்பட்டுள்ள www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணை யதள முகவரியில் தங்களது பெயரினை கட்டணமில்லா மல் இலவசமாக பதிவு செய்து கொண்டு, இவ்விணைய தளத்தில் மத்திய மாநில அரசினால் நடத்தப்படும் போட்டித் தேர்வகளுக்கான பாடக்குறிப்புகள் வினாவிடைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.