தமிழ்நாடு மருத்துவத்துறை ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி புதனன்று மதுரை மருத்துவக் கல்லூரி நுழைவாயில் முன்பு நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் க.நீதிராஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஆ.செல்வம் சிறப்புரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் தி.நாகராஜன் நன்றி கூறினார்.