districts

img

திருவில்லிபுத்தூரில் நாட்டுப்புற கலைகள் பயிற்சி-ஆராய்ச்சி மையம் திறப்பு விழா

திருவில்லிபுத்தூர், மே 14- விருதுநகர் மாவட்டம், திருவில்லி புத்தூர் கோடாங்கி கலை கூடத்தின் நாட்டுப்  புற கலைகளுக்கான பயிற்சி மற்றும்  ஆராய்ச்சி மைய திறப்பு விழா நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு அனைத்து கலை ஞர்கள் வாழ்வாதார கூட்டமைப்பு இயக்கு னர் பேராசிரியர் காளீஸ்வரன் தலைமை வகித்தார்.  பயிற்சி கூடம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்  திறந்து வைத்தார்.  அப்போது ஆட்சியர் பேசுகையில், ‘நம்  நாட்டில் சங்க காலம் தொட்டு கலைகள் செழித்து வளர்ந்துள்ளன. திருத்தங்கலில் சங்க கால மக்கள் கலைகளை வளர்த்தது குறித்த சான்றுகள் உள்ளன. கலைஞர்கள் சிறப்பாக செயல்பாட்டு, நம் பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு  செல்கின்றனர். விருதுநகர் மாவட்டத்திற்கு என்று தனித்துவமாக பல்வேறு கலைகள்  உள்ளது,’ என்று கூறினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பி னர்கள் வெண்புறா, கரிசல் கருணாநிதி ஆகி யோர் வாழ்த்தி பேசினார்  இந்த கோடங்கி கலை கூடத்தில் தப்  பாட்டம், ஒயிலாட்டம், சாட்டை குச்சி, 8  வகையான கரகம், மான் கொம்பு, சிலம்பம், பொய்க்கால் குதிரை, காவடி, தெருக் கூத்து நாடகம் உள்ளிட்ட பல்வேறு நாட்  டுப்புற கலைகளுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது. மேலும் கலை இலக்கிய மாண வர்களுடன் இணைந்து நாட்டுப்புற கலை கள் குறித்து ஆராய்ச்சியும் நடைபெறு கிறது.  கோடாங்கி கலைக்ககூட இயக்குனர் உமாராணி ஏற்பாடுகளை செய்தார். திறப்பு  விழாவை தொடர்ந்து கலைஞர்களின் பேர ணியும் கலை விழாவும் நடைபெற்றது கலை  விழாவில் தமுஎகச மாவட்ட தலைவர் சண்முகம், மாவட்ட பொருளாளர் நித்தி யானந்தம், கிளை பொருளாளர் மரிய  டேவிட் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.