கடமலைக்குண்டு, அக்.20- தேனி மாவட்டம், மயி லாடும்பாறை-மூலக்கடை சாலையின் இடையே சிறு ஓடை அமைந்துள்ளது. மழைக் காலங்களில் இந்த ஓடையில் அதிக அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அதுபோன்ற நேரங்களில் வெள்ள நீர் மயி லாடும்பாறை சாலை வழி யாக சென்று சுக்கான் ஓடை யை சென்றடையும். எனவே ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் மயி லாடும்பாறை-மூலக்கடை இடையே போக்குவரத்து தடைபடும். இதனை தடுக் கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் மயி லாடும்பாறை சாலை ஓரமாக சுமார் 500 மீட்டர் தொலை விற்கு தடுப்புச் சுவர் கட்டப் பட்டது. அதன் பின்னர் ஓடை யில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டாலும் போக்குவரத் துக்கு இடையூறு இல்லாமல் சாலையோரமாக வெள்ள நீர் செல்ல தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் சிலர் தடுப்ப ணையில் ஒரு பகுதியை இடித்து அப்புறப்படுத்தினர். இதனால் வெள்ள நீர் மீண் டும் சாலை வழியாக செல் லும் நிலை காணப்பட்டது. இந்நிலையில் வியாழக் கிழமை மாலை மூலக்கடை பகுதியில் 2 மணி நேரத்திற் கும் மேலாக கனமழை பெய்து சிறு ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தடுப் புச்சுவர் உடைக்கப்பட்டி ருந்த காரணத்தால் வெள்ள நீர் சாலை வழியாக செல்ல தொடங்கியது. இதனால் மயி லாடும்பாறை-மூலக்கடை இடையே 30 நிமிடங்கள் போக்குவரத்து தடை ஏற்பட் டது. வெள்ள நீர் குறையும் வரை வாகன ஓட்டிகள் மழை யில் காத்திருந்தனர். அடுத்து மழை காலம் தொடங்க உள் ளதால் சிறு ஓடையில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே தடுப்புச் சுவரை சீர மைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.