விருதுநகர், டிச.12- விருதுநகர் அருகே தனியார் கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் பட்டாசு தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த கருத்தரங்கம் நடை பெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் கருத்துரையாற்றினர். கருத்தரங்களில் பங்கேற்ற பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரி கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதி நிதிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். கருத்தரங்கில் சிஐடியு மாவட் டச் செயலாளர் பி.என்.தேவா பேசி யதாவது: பட்டாசு ஆலையில் வெடி விபத்துகள் நடைபெறுவதற்கும் அதில் தொழிலாளர்கள் உயிர் பலியாவதற்கும் முக்கியக் காரண மாக இருப்பது பீஸ்ரேட் முறையா கும். அதாவது, ஒரு பட்டாசு தயா ரிக்க இவ்வளவு பணம் என தொழி லாளர்களிடம் பேசி ஒப்பந்த அடிப்ப டையில் பட்டாசுகளை தயார் செய் வதால் தான் விபத்துகள் ஏற்படு கின்றன. பட்டாசு தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் ரூ.685 வழங்க வேண்டுமென சிஐடியு முன் மொழிந்த கோரிக்கை அரசு ஆணை யாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை அது அமல்படுத்தப்படவில்லை.
அர சால் நிர்ணயம் செய்யப்பட்ட ஊதி யத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். பட்டாசு தயாரிப்பு குறித்து பயிற்சி வழங்கும் பயிற்சி மையம் தொட ர்ந்து செயல்படாமல் உள்ளது. தற்போது வரை வெறும் 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே பயிற்சி வழங்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ஒவ்வொரு பட்டாசு ஆலையிலும் உள்ள ஒரு அறையில் முதியோர் கல்வித்திட் டம் மூலம் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எழுதப் படிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஏராளமான தொழிலா ளர்கள் எழுத்தறிவு பெற்றனர். ஒவ்வொரு பட்டாசு ஆலையி லும், பட்டாசு தயாரித்தல், வேதிப் பொருட்களின் தன்மை, அதைக் கையாளும் முறைகள் மற்றும் வெடி விபத்து எதனால் ஏற்படு கிறது என்பது குறித்தும் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு பயிற்சிய ளிக்க வேண்டுமென்றார்.