districts

மதுரை முக்கிய செய்திகள்

கால்நடை பராமரிப்புத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புக! முதல்வருக்கு வாலிபர் சங்கம் மனு

சிவகங்கை, டிச.11-  தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக அறிவிக்கப்பட்டு நேர்காணல் நடத்தி முடித்த பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் முதலமைச்ச ருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத்தலைவர் வழக்க றிஞர் ஜேம்ஸ்ராஜா,மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் இன்னாசிராஜா ஆகியோர் அனுப்பிய மனு வில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும்  கால்நடைத் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடம்,  கால்நடை  பராமரிப்பு உதவியாளர் பணியிடம், ஆய்வக உடனாள் பதவிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் தகுதியான நபர்களுக்கு நேர்காணல் நடந்தது. சிவகங்கை  மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு 19.4.2022 அன்றும்,கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு 20.4.2022 முதல் 27.04.2022வரை ,ஆய்வக உடனாள் பத விக்கு 29.04.2022 அன்றும் சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேர்காணல் நடந்தது.ஆனால் இந்த காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை. உட னடியாக அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பு வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

தடையை மீறி வனப்பகுதிக்குள் செல்ல முயன்ற இருவர் கைது

திருவில்லிபுத்தூர், டிச.11-   விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே  செண்பகத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரேமா(24).  பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த இவர் வனத்துறை சூழல் மேம்பாட்டு குழுவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலை யில் திருத்தங்கல் பகுதியை சேர்ந்த முத்தையா(21), முத்துப்பாண்டி(22) ஆகியோர் வனப்பேச்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வனத்துறை சோத னைச் சாவடியை தாண்டி சென்றுள்ளனர். அவர்களிடம் மழை காரணமாக வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி இல்லை என பிரேமா கூறியுள்ளார். அதற்கு அவர்கள் கோயில் சார்பில் வாகனம் செல்வதற்கு டோக்கன் வங்கி யுள்ளதாக கூறியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் முத்தையா, முத்துப்பாண்டி சேர்ந்து பிரேமா மற்றும் அவ ரது தம்பியை தாக்கியுள்ளனர். இதுகுறித்து பிரேமா அளித்த புகாரில் மம்சாபுரம் போலீஸார் முத்தையா, முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு 

தேனி, டிச.11- வைகை அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் அணை யிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது . நீர்ப்பிடிப்பு பகுதியில்  சில நாட்களுக்கு முன்பு தொடர் மழையால் வைகை அணை முழுக் கொள்ளளவை எட்டியது. அதனைத்தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 64.53 அடியாக குறைந்துள்ளது. இதனால் அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு  குறைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று  1319 கனஅடி நீர் திறக்கப்  பட்ட நிலையில் ஞாயிறன்று  காலைமுதல் 769 கனஅடி நீர் திறக்கப் படுகிறது. 941 கனஅடி நீர் வருகிறது.   முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 140.75 அடியாக உள்ளது. 538 கனஅடி நீர் வருகிறது. 511 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. 100 கனஅடி நீர் வருகிறது. 40 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 61 கனஅடி நீர் வருகிறது. 30 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 

நத்தம் அருகே கார் மரத்தில் மோதி ஒருவர் பலி 

நத்தம், டிச.11- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர் ஜெயராஜ் (65). இவர் தனது குடும்பத்தினருடன் காரில்  திண்டுக்கல் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். காரை அவரது மருமகன் மோகன்தாஸ்  ஓட்டி வந்தார்.  இந்நிலையில் ஏரக்காபட்டி  பகுதியில் வந்தபோது காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார்  சாலையோர மரத்தில் மோதியது. இதில் முன்பக்கம் உட்கார்ந்து வந்த ஜெய ராஜ் பலத்த காயமடைந்து  சம்பவ இடத்திலேயே பலி யானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீ சார் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி நத்தம் அரசு  மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.காரில் பயணம்  செய்து காயமடைந்த 4 பேர் நத்தம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு,பின்னர் மேல்சிகிச்சைக் காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட னர்.  இச்சம்பவம் குறித்து நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

அருப்புக்கோட்டை, டிச.11- அருப்புக்கோட்டை அருகே  ஏ.டி.எம் மையத்தில் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடை பெற்றுள்ளது குறித்து போலீசார் விசாரித்து வரு கின்றனர்.   அருப்புக்கோட்டை-பந்தல்குடி சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின்  கிளை செயல்பட்டு வருகிறது  அதன்  அருகியிலேயே  ஏடிஎம் மையம் உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமையன்று இரவு அங்கு புகுந்த மர்ம நபர்,  அங்கிருந்த விளக்குகளை அணைத்துவிட்டு இரும்பு  கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள் ளார்.  ஆனால் அது உடையவில்லை. எனவே, அந்த மர்ம  நபர் அங்கிருந்து  தப்பிச் சென்றுள்ளார்.  இதனால் இயந்தி ரத்தின் உள்ளே இருந்த பல லட்ச ரூபாய் பணம் தப்பி யது. இதையடுத்து, சென்னையில் உள்ள வங்கியின் பாது காப்பு மையத்தில் இருந்து சிசிடிவி கேமரா மூலம் ஏடிஎம் மையத்தை பார்வையிட்ட வங்கி அதிகாரிகள், இது குறித்து  அருப்புக்கோட்டை   குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  விரைந்து வந்த போலீசார் ,மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் அருகே கார் டயர் வெடித்து விபத்து: ஒருவர் பலி   

விருதுநகர், டிச.11- விருதுநகர் அருகே நான்கு வழிச் சாலையில் சென்ற  காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரி ழந்தார். 3 பேர் காயமடைந்தனர். சென்னையைச் சேர்ந்தவர் கரிகாலன் (43). இவர், தனது காரில் நண்பர்களை அழைத்துக் கொண்டு கன்னி யாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். பின்பு அங்கி ருந்து புறப்பட்டு மீண்டும் சென்னைக்கு சென்று கொண்டி ருந்தனர். விருதுநகர் அருகே நான்கு வழிச் சாலையில் மணிப்  பாறைப்பட்டி விலக்கு அருகே கார் வந்த போது, எதிர்பாராதவிதமாக, காரின் டயர் வெடித்து. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே கரிகாலன் உயிரிழந்தார். மேலும், சென்னையைச் சேர்ந்த பகிமாபானு (23), முத்துக்குமரன் (30), வினோ பேட்ரீக் (30) ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில்வே பணிக்கு தோண்டிய பள்ளத்தில் நீரில் மூழ்கி முதியவர் பலி 

தேனி, டிச.11- தேனி ரயில் நிலைய கட்டுமானப் பணிக்கு மண் எடுப்பதற்கு  தோண்டிய பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி  அடையாளம் தெரியாத  முதியவர் உயிரி ழந்தார். தேனி ரயில் நிலையம் அருகே குட்ஷெட் தெருவை அடுத்துள்ள பகுதியில் அகல ரயில் பாதை கட்டுமானப் பணிக்கு மண் அள்ளுவதற்காக பள்ளம் தோண்டப்பட் டது. குளம் போல காணப்படும் இந்தப் பள்ளத்தில் 10 அடி உயரத்திற்கும் மேல் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் குளிப்ப தற்காக இறங்கிய 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒரு வர், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து அப் பகுதியில் இருந்தவர்கள் அளித்த தகவலில், தேனி தீயணைப்பு மீட்பு துறையினர் தண்ணீ ரில் மூழ்கிய முதியவரின் சடலத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தேனி காவல்துறையினர் வழக்கு பதிந்து, இறந்த வர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இரு சக்கர வாகனத்தில்  பணம், செல்போன் திருட்டு 

தேனி, டிச.11- தேனி அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம், 2 கைப்பேசிகள் திருடு போனது குறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்தனர். தேனி அருகேயுள்ள கோடங்கிபட்டியைச் சேர்ந்த வர் ரங்கராஜ் மனைவி சரண்யா. இவர், கோடாங்கிபட்டி யில் புதிதாக திறக்கவுள்ள தனது நாட்டுச் சர்க்கரை ஆலைக்கு பொருள்கள் வாங்க பழனிசெட்டிபட்டிக்கு சென்று அங்குள்ள  தனியார் பர்னிச்சர் கடை அருகே நிறுத்தியுள்ளார் .கடைக்கு சென்று விட்டு வந்து பார்த்த  போது  தனது இருசக்கர வாகனத்தில், பையில் வைத்தி ருந்த ரூ.2 லட்சம், 2 கைப்பேசிகள் திருடு போனது .இது   பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சரண்யா அளித்த புகாரின் பேரில், சார்பு ஆய்வாளர் ஈஸ்வரன்  வழக்குப்  பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

வி.தொ.ச இராஜாக்கமங்கலம் ஒன்றிய கோரிக்கை மாநாடு

நாகர்கோவில், டிச.11- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் இராஜாக்கமங்கலம் ஒன்  றிய கோரிக்கை மாநாடு ஈத்தா மொழியில் நடைபெற்றது. மிக்கேல் நாயகி தலைமை தாங்கினார். மாவட்ட தலை வர் என்.எஸ். கண்ணன், மாவட்ட செயலாளர் மலை விளைபாசி, ஒன்றிய செயலா ளர் ஆர்.குமரேசன், தலைவர் தாமோதரன், சிஐடியு கன் வீனர் ராஜ்குமார், பெட்ரோ ணிக்கம் ஆகியோர் பேசி னர். ஒன்றிய தலைவராக தாமோதரன், செயலாள ராக ஆர்.குமரேசன், பொரு ளாளராக ஜெபமணி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர். தமிழகத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு தனி யாக துறை உருவாக்கிட வலி யுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை பள்ளி மாணவர்களுக்கு விற்ற கடை சீல் வைப்பு

நாகர்கோவில், டிச.11- கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேரூராட்சிக்கு உட்பட்ட சாணிவிளை பகு தியில் உள்ள பள்ளிகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட கூல் லிப் மற்றும் கணேஷ் போன்ற போதைப்பொருட்களை அருகில் உள்ள கடையில் விற்பதாக மாவட்ட சமூக நல அலுவலர் அவர்களுக்கு  தகவல்  கிடைக்  கப் பெற்றது. புகார் அடிப்படையில் மாவட்ட  சமூகநல அலுவலருடன் புகையிலை தடுப்பு அலுவலர் இணைந்து பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள பலசரக்கு கடையில் ஆய்வு மேற்கொண்டனர். கடையில் பலசரக்கு பொருட்களுடன் அரசால் தடைச்செய்யப்பட்ட கணேஷ்  மற்றும் கூல் லிப் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. ஆய்வில் 2.376கி.கிராம் கணேஷ் புகையிலை மற்றும் கூல் லிப் 250 சிறிய பொட்டலங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. கடையில் விசாரித்த போது கடையின் உரி மையாளர் விஜயகுமார் காட்டுவிளை, சாணிக்கரையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட கடையினை உடனடியாக மூடி சீல் வைத்திட கூறியதின் பேரில் விஜயகுமார் நடத்திய கடைக்கு அபராதம் விதித்து மாவட்ட சமூக நல அலுவலரால், திருவட்டார் வருவாய் அலுவலர், உணவு பாதுகாப்பு அலுவலர், திருவாட்டார் காவல்துறையினர் முன்னி லையில் சீல் வைத்து மூடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா.  கூல் லிப், கணேஷ் போன்ற தடைசெய்யப் பட்ட போதைப்பொருட்கள் குறிப்பாக பள்ளி  கல்லூரி மாணவர்களிடையே பயன்படுத் தும் பழக்கம் அதிகமாகி வருகிறது. இத னால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படு வதோடு அவர்களிடம் ஒழுக்ககேடும் ஏற்படு கிறது. இதனை பயன்படுத்துபவர்கள் கோபம் போன்ற பல எதிர்மறையான குணங்களால் சண்டை சச்சரவுகளில்  ஈடுபடுகின்றனர்.  இந்த போதைப்பொருட்கள் சாக்லேட் போன்ற பல்வேறு வாசனை பொருட்கள் வடிவத்திலும் பவுடர் வடிவத்திலும் அதிக மாக புழக்கத்தில் உள்ளது. பெற்றோர் மற்  றும் ஆசிரியர்கள் குழந்தைகளை நெருக்க மாக கண்காணித்து ஆராய வேண்டும். குழந்தைகளின் நடடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டால் பிள்ளைகளின் ஸ்கூல் பேக், ஆடைகள், அவர்கள் பயன்படுத்தும் பொருட் களை மாணவர்களுக்கு தெரியாமல் அடிக் கடி ஆய்வு செய்ய வேண்டும். போதைப் பொருள் பயன்படுத்துதல் ஒரு நோய் என் பதை அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும். நல்உள்ளம் கொண்ட அனை வரும் இந்த போதைப்பொருள் பயன்பாட் டில் உள்ள நம் உறவுகளையும் நண்பர் களையும் மீட்டெடுக்க உதவி செய்ய  வேண்டும். இது தொடர்பான உதவி தேவைப்படுவோர் மாவட்ட சமூகநல அலு வலரை தொடர்பு கொள்ளலாம்.