திண்டுக்கல், ஆக.31 திண்டுக்கல் மாவட்டத்தில் விவ சாயப் பொறியியல் இயந்திரங் களை இயக்கும் தனியார் நிறுவ னங்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், குஜிலியம் பாறை பகுதியில் வேளாண் இயந் திர வாடகை மையம் அமைக்க வேண்டுமென என்று தமிழ்நாடு அரசு மனுக்கள் குழுவிடம் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் மனு அளித்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மூத்த தலைவர் பி.செல்வ ராஜ் தமிழ்நாடு மனுக்கள் குழுத் தலைவரிடம் அளித்துள்ள மனு வில், “ திண்டுக்கல் மாவட்டம் குஜி லியம்பாறை வட்டத்தில் விவசாயக் கருவிகள் டிராக்டர்கள், ரொட்ட வேட்டர், பொக்லைன், கதிர் அறு வடை இயந்திரம், களை எடுக்கும் இயந்திரம் போன்றைகளின் வாடகை பன்மடங்கு உயர்ந்துள் ளது. இதனால் விவசாயிகள் கடு மையாகப் பாதிக்கப்பட்டு வருகி றார்கள். வேளாண்மைப் பொறியி யல் துறை மூலம் மானியத்துடன் குறைவான வாடகைக்கு விவசா யப் பணிக்குப் பயன்படும் இயந்தி ரங்கள் கிடைக்க குஜிலியம்பாறை யில் வேளாண்துறை மூலம் வாடகை இயந்திர மையம் அமைத்துத் தர வேண்டும்” எனத் தெரிவித்திருந் தார். மேலும் அவர் கூறுகையில், “குஜிலியம்பாறை வட்டாரத்திலி ருந்து கிட்டத்தட்ட 120 கி.மீ தொலை வில் உள்ள பழனியில் உள்ள உதவி வேளாண் செயற்பொறியாளர்
அலுவலகத்தில் இருக்கும் வேளாண் வாடகை இயந்திர மையத்தை அணுகி இயந்திரங்களைப் பெறு வது மிகவும் சிரமமானது. குஜிலியம்பாறை வட்டார அளவில் வேளாண் இயந்திரங்கள் வழங்க வேண்டும் என்ற நீண்ட காலமாகக் கோரி வந்துள்ளோம். அவ்வாறு கோரிக்கை எழும் போதெல்லாம் நாங்கள் ஒன்றிய அளவில் வேளாண் இயந்திரங் கள் வழங்குவதற்கான புதிய திட்டம் வைத்திருப்பதாகத் தொடர்ந்து இதே பதிலை அதிகாரிகள், ஆட்சி யாளர்கள் சொல்லி வருகிறார் கள். இந்தப் பகுதியிலுள்ள விவ சாயிகள் கடுமையான வறட்சியைக் கடந்த 50 ஆண்டுகளாகச் சந்தித்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதி என்பதால் குஜிலியம்பாறை எப்போதும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது. தற்போது புதிதாகப் பொறுப்பேற்ற திமுக அரசு சார்பா கத் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்துள்ள மனுக்கள் குழு ஒரு உறுதியாகவும், உடனடியாகவும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென் றார். இந்த கோரிக்கை குறித்துப் பதி லளித்துள்ள மனுக்கள் குழு, “தற் போது வேளாண்மைப் பொறி யியல் துறை மூலம் ஒன்றிய அள வில் வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வாடகைக்கு விடுவதற்கான புதிய திட்டம் அர சின் பரிசீலனையில் உள்ளது. அந்தத் திட்டம் செயலாக்கத்திற்கு வரும் நிலையில் மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.